எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும் - மஹிந்த தேசப்பிரிய

Published By: Vishnu

16 Feb, 2023 | 05:44 PM
image

(எம்.மனோசித்ரா)

எல்லை நிர்ணய குழுவின் நடவடிக்கைகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதற்கமைய இம்மாத இறுதியில் இடைக்கால அறிக்கையையும் , மார்ச் இறுதி வாரத்தில் முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எல்லை நிர்ணய குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 25 மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் செயற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

மேலும் 6 மாவட்டங்களின் செயற்பாடுகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. ஏனையவற்றில் இரு மாவட்டங்களின் செயற்பாடுகள் மாத்திரமே 50 சதவீதத்தையும் விடக் குறைவாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

எனவே எமது முழுமையான அறிக்கையை எதிர்வரும் மார்ச் 25- 31ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்க முடியும். எனினும் எமது இடைக்கால அறிக்கையை இம்மாத இறுதியில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8800இலிருந்து, 5100 அல்லது 4900 வரை குறைக்க முடியும் என்று நம்புகின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51