கடன் மறுசீரமைப்பு குறித்த நாணய நிதியத்தின் அறிவிப்பை மார்ச்சில் எதிர்பார்க்கின்றோம் - ஜனாதிபதி

Published By: Digital Desk 3

16 Feb, 2023 | 09:41 AM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை அதன் கடன் மறுசீரமைப்புக்களை ஆரம்பிக்க முடியும் என்ற அறிவித்தல் சர்வதேச நாணய நிதியத்தினால் மார்ச் மாதமளவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்காக நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் புதிய அணுகுமுறைகள் அத்தியாவசியமாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

எஸ்.எல்.டி.சி. ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தின் நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் கட்டத்திலேயே நாம் காணப்படுகின்றோம். எதிர்வரும் மார்ச் மாதமளவில் இலங்கை கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.

எனினும் அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூகத்தில் புதிய அணுகுமுறைகள் அத்தியாவசியமாகும். புதிய அணுகுமுறைகளுக்காக புதிதாக சிந்திப்பதும் அவசியமாகும். நாம் தற்போது பரிமாற்ற யுகத்திலேயே காணப்படுகின்றோம்.

நல்லவை தீயவை என அனைத்தையும் எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்புக்கள் நிறைவடைந்ததன் பின்னர் பல புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயராகவுள்ளோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட வாழைப்பழத்தில் போதைப்பொருள்

2023-09-30 08:50:46
news-image

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி இராஜினாமா...

2023-09-30 08:54:35
news-image

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை...

2023-09-30 08:38:16
news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38