(இராஜதுரை ஹஷான்)
நிதி நெருக்கடிக்கு மத்தியில் நாணயம் அச்சிட்டு தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை உரிய காலப்பகுதியில் நிதியுதவியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
பொருளாதார நெருக்கடிக்கு ஒப்பீட்டளவில் தீர்வு கண்டவுடன் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு கோரும் பெருந்தொகையான நிதியை ஒதுக்க முடியாத நிலை காணப்படுகிறது.
பல மில்லியன் கணக்கான நிதியை ஒரே கட்டத்தில் ஒதுக்கும் போது அரச சேவைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் பாதிப்பு ஏற்படும்.
நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் மற்றும் நலன்புரி சேவைகளுக்கு நிதி ஒதுக்குவது சிக்கலாகும்,அது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
அரசாங்கம் என்ற ரீதியில் தற்போது மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.
ஒரு மாதத்திற்கு தேவையான அரச செலவுகளை ஈடு செய்வதற்கு பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ள பின்னணியில் நாணயம் அச்சிட்டு தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மாதம் 31 ஆம் திகதிக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
கடன் குறித்து வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியம்,உலக வங்கி மற்றும் இந்தியா கூட்டிணைந்து நடத்தும் வட்டமேசை மாநாடு இலங்கைக்கு சாதகமாக அமையும்.
பொருளாதார நெருக்கடிக்கு ஒப்பீட்டளவில் தீர்வு கண்டவுடன் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு மேலும் பாதிப்பு ஏற்படும் போது அதற்கு யார் பொறுப்பு கூறுவது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM