கொலைச்சம்பவம் : 16 வயதுடைய சிறுவன் கைது

15 Feb, 2023 | 12:32 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

களுத்தறை, வெலிப்பென்ன பகுதியில் நேற்று (பெப் 14)  நபர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெலிபன்ன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் அளுத்கம- மதுகம பிரதான வீதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் நபர் சீனவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக வெலிப்பென்ன வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 34 வயதுடைய குருதிப்பிட்டிய, வலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

உயிரிழந்தவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு கல்மத்த பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு செல்வதற்கு முயன்ற போது மற்றொரு நபருடன் இடம்பெற்ற தகராறு காரணமாக தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் மேற்கொண்ட 16 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வெலிப்பென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51