காதலர் தினத்தை இந்திய அமைச்சர் பசு காதல் தினமாக கொண்டாடியுள்ளார்.
உலக அளவில் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14 ஆம் திகதியை பசு அணைப்பு தினமாக கொண்டாட வேண்டுமென இந்திய விலங்குகள் நல சபை அறிவித்தது.
எனினும், இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியதை தொடர்ந்து, இந்திய விலங்குகள் நல சபை தனது அறிவிப்பை திரும்பப்பெற்றது.
இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்தின் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தர்மபால் சிங் நேற்றைய தினத்தை பசு காதல் தினமாக கொண்டாடியுள்ளார்.
பசுக்களுக்கு வெல்லம், ரொட்டி போன்றவற்றை வழங்கி பசு காதல் தினத்தை கொண்டாடிய அவர், பசுக்களை நமது தாயாக கருத வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
"நமக்கு 3 தாய்கள் உள்ளனர். முதலில் நம்மைப் பெற்றெடுக்கும் நமது தாய், 2-வது பசு தாய், 3-வது பாரத தாய். முதல் அன்பு நம் தாய் மீது இருக்க வேண்டும். பிறகு பசு தாய் மற்றும் பாரத தாய்க்கு நமது மரியாதையை செலுத்த வேண்டும். பசுவின் சாணம் மற்றும் சிறுநீரை விட உலகில் சிறந்தது எதுவும் இல்லை. என்னை போலவே அனைத்து மக்களும் காதலர் தினத்தை பசு காதல் தினமாக கொண்டாட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM