2035 இல் பெற்றோல், டீசல் கார் விற்பனைக்கு தடை விதிக்கும் சட்டமூலத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகரித்தது.

Published By: Sethu

14 Feb, 2023 | 06:08 PM
image

2035 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பெற்றோல் மற்றும் டீசல் கார்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டமூலத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் இன்று அங்கீகரித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஏற்கெனவே இச்சட்டமூலத்தை அங்கீகரித்துள்ளன. இந்நிலையில் ஐரோப்பிய பாராளுமன்றமும் இன்று அங்கீகாரம் வழங்கியது. 

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது 340 எம்.பிகள் ஆதரவாக வாக்களித்தனர். 279 பேர் எதிராக வாக்களித்தனர். 21 பேர் வாக்களிப்பில் பங்குபற்றவில்லை. 

இச்சட்டத்தின்படி, 2035 ஆம் ஆண்டின்பின் பெற்றோல் அல்லது டீசல் மூலம் இயங்கும் புதிய கார்களை விற்பனை செய்ய முடியாது. எனினும், ஏற்கெனவே பாவனையிலுள்ள பெற்றோல், டீசல் கார்களை தொடர்ந்தும் பயன்படுத்த முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவின் தங்க சுரங்கத்தில் சட்டவிரோதமாக அகழ்வில்...

2025-01-14 11:34:11
news-image

ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்;...

2025-01-13 19:48:36
news-image

பள்ளி மாணவரின் மர்ம மரணத்தை கண்டித்து...

2025-01-13 09:56:38
news-image

உத்தர பிரதேசத்தின் கன்னவுஜ் ரயில் நிலைய...

2025-01-13 10:03:33
news-image

காசா மோதலின் முதல் 9 மாதங்களில்...

2025-01-12 13:35:01
news-image

பிரிட்டனின் தொலைக்காட்சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக...

2025-01-12 12:06:56
news-image

ரஸ்யாவுடனான போர் முனையில் இரண்டு வடகொரிய...

2025-01-12 10:28:48
news-image

அசாம் சுரங்க விபத்தில் 4 உடல்கள்...

2025-01-12 10:04:22
news-image

தமிழ்நாடு - பினாங்கு மாநிலங்களின் வீட்டு...

2025-01-11 17:01:55
news-image

டில்லி விமான நிலையத்துக்கு முதலை மண்டை...

2025-01-10 16:14:47
news-image

காட்டுத்தீயிலிருந்து வீட்டை பாதுகாக்க முயன்றவேளை எனது...

2025-01-10 12:53:11
news-image

ஸ்பெயினை நோக்கி சென்றுகொண்டிருந்த குடியேற்றவாசிகளின் படகு...

2025-01-10 12:04:33