இந்த வருடத்தில் உலகெங்கும் மொத்தம் 110 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு நேற்று தெரிவித்தது.
இதன் பிரகாரம் இந்த வருடத்தில் 67 ஊடகவியலாளர்கள் தமது கடமையின் போது கொல்லப்பட்டுள்ளனர். அதேசமயம், 43 ஊடகவியலாளர்கள் என்னவென்று அறியப்படாத சூழ்நிலைகளின் கீழ் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த வருடத்தில் 27 உத்தியோகபூர்வமற்ற ஊடகவியலாளர்களாக சேவையாற்றிய பொதுமக்களும் 7 ஏனைய ஊடக நிறுவன பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகளவில் ஊடகவியலாளர்களின் மரணங்கள் இடம்பெற்ற நாடாக சிரியா உள்ளது. அங்கு இந்த வருடத்தில் கடமையின் போது 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவுக்கு அடுத்த இடத்தில் பெருமளவு ஊடகவியலாளர்களின் மரணங்களைச் சந்தித்த நாடாக பிரான்ஸ் உள்ளது. அந்நாட்டில் 9 ஊடகவியலாளர்கள் தமது கடமையின் போது கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள சார்ளி ஹெப்டோ சஞ்சிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பிரான்ஸிலான ஊடகவியலாளர்களது மரணங்களில் அதிகரிப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு சபையால் (சி்.பி.ஜெ.) வெளியிடப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் மரணங்கள் தொடர்பான அறிக்கையானது, கடந்த வருடத்தில் கடமையின் போது 69 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது.
மேலும் சி.பி.ஜெ. இன் அறிக்கை என்னவென்று அறியப்படாத சூழ்நிலைகளின் கீழ் குறைந்தது 26 பேர் பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பால் வெளியிடப்பட்ட தொகையிலும் 17 குறைவாகும்.
உலகளாவிய ரீதியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் சுமார் 28 பேர் (40 சதவீதம்) ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாக சி.பி.ஜெ. தெரிவிக்கிறது.
மேற்படி ஊடகவியலாளர்கள் மரணங்கள் தொடர்பான தரவுகளானது கடந்த ஜனவரி முதலாம் திகதிக்கும் இந்த மாதம் 23 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இடம்பெற்ற மரணங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் 66 ஊடகவியலாளர்கள் மரணமாகியுள்ள நிலையில் இந்த வருடத்தில் அந்தத் தொகையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இந்தத் தரவுகள் சுட்டிக் காட்டுவதாக உள்ளதென எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.
2005 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கடமையின் போது 787 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM