தோப்பூர் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

Published By: Digital Desk 5

14 Feb, 2023 | 12:43 PM
image

திருகோணமலை, தோப்பூர் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் செவ்வாக்கிழமை (14) அதிகாலை சுமார் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

யானையின் தாக்குதலின் காரணமாக தோப்பூர் - அல்லைநகர் 09 எனும் கிராமத்தைச் சேர்ந்த குப்பைத்தம்பி அப்துல்காதர் என்ற 83 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குடியிருப்பு காணியில் நுழைந்த காட்டு யானை வீட்டில் இருந்த தென்னைமரத்தை சாய்த்து சேதம் செய்துள்ளது.

அப்போது சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்த குப்பைத்தம்பி அப்துல்காதர்  யானையை சீனாவெடி வெடித்து துரத்த முயற்சித்துள்ளார். 

இதன்போது கோவமடைந்த யானை அவரை துரத்தி வீட்டுக்குள் நுழைந்தபோது அவரை வீட்டுக்குள் வைத்து தாக்கியதில் இந்த பரிதாகபரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்த சமயம் அவருடன் அவரது மனைவியும் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டி விமானப்படை முகாமில் வெடிப்பு :...

2023-09-26 21:06:57
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த...

2023-09-26 19:50:49
news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11