குளியாபிட்டிய நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் உத்தியோகபூர்வ காரை திருடிச் சென்ற சந்தேக நபர் வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபரால் திருடப்பட்டதாக கூறப்படும் காரும் கைப்பற்றப்பட்டது.
ஹோமாகம, உடுவான பகுதியில் உள்ள வீட்டுத் தொகுதியில் சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டையும் சோதனையிட்டபோது, இரண்டு போலி கைத்துப்பாக்கிகள், நான்குமுனைக் கத்திகள், விஷத் திரவம் அடங்கிய போத்தல் மற்றும் மிளகாய்ப் பொடி அடங்கிய பையும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
காரை ஒப்படைப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் கேட்டு நீதிவானுக்கு சந்தேக நபர் விடுத்த அழைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM