நீதிவானின் காரை திருடிச் சென்று 5 இலட்சம் ரூபா கேட்டவர் வத்தளை ஒலியமுல்ல பகுதியில் கைது!

Published By: Digital Desk 5

14 Feb, 2023 | 11:03 AM
image

குளியாபிட்டிய நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் உத்தியோகபூர்வ காரை  திருடிச் சென்ற  சந்தேக நபர் வத்தளை ஒலியமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

இதன்போது சந்தேக நபரால்  திருடப்பட்டதாக கூறப்படும்  காரும்  கைப்பற்றப்பட்டது.

ஹோமாகம, உடுவான பகுதியில் உள்ள  வீட்டுத் தொகுதியில் சந்தேக நபர் தங்கியிருந்த வீட்டையும்  சோதனையிட்டபோது, இரண்டு போலி கைத்துப்பாக்கிகள், நான்குமுனைக் கத்திகள், விஷத் திரவம் அடங்கிய போத்தல் மற்றும் மிளகாய்ப் பொடி அடங்கிய பையும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.   

காரை ஒப்படைப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் கேட்டு நீதிவானுக்கு சந்தேக நபர் விடுத்த அழைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட  விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55