(எம்.வை.எம்.சியாம்)
கொழும்பு, பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெஸ்லைன் மாவத்தை, ஹல்கஹகும்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச்சூட்டு இலக்காகியுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொரளை ஹல்கஹகும்புர பிரதேசத்தில் இராணுவ வீரர்கள் இருவர் குறித்த பெண்ணை கைது செய்வதற்கு முற்பட்ட போது இராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் குறித்த பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 25 வயதுடைய ஹல்கஹகும்புர, பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பில் குறித்த இராணுவ வீரர்கள் இருவரும் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM