அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு

Published By: Nanthini

12 Feb, 2023 | 02:25 PM
image

ம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருகின்றனர்.

அத்தோடு அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பேரிடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, மருதமுனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை,  நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேக அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், வழமைக்கு மாறான கடல் நீரின் குளிர்ச்சி, கடல் அலைகளின் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் தொடங்கி நிந்தவூர், காரைதீவு வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் 400 மீட்டர் தூரம் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் நீர் புகுந்துள்ளதாலும், கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதாலும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரைதீவு, நிந்தவூர் கரையோர பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் கடலரிப்பினை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனினும், அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் கடலரிப்பு தீவிரமடைவதற்கு ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே பிரதான காரணம் என அப்பிரதேச மக்கள் நீண்ட காலமாக குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00