தரிசனத்துக்காக சிவனொளிபாத மலை ஏறிக்கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் மலைவழியே குழந்தை பிரசவிப்பு 

Published By: Nanthini

12 Feb, 2023 | 02:00 PM
image

ரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு நேற்று (11) தரிசனம் செய்ய சென்ற கர்ப்பிணிப் பெண்ணொருவர் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடுவழியே குழந்தை பிரசவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு 32 வயதுடைய உடுவர ஆராச்சிகே நிறூஷா தினுஷா என்ற கர்ப்பிணிப் பெண் தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார்.

மலை ஏறிக்கொண்டிருந்த வேளையில் ஊசிமலைப் பகுதியில் வைத்து அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவ்விடத்திலேயே குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

அதனையடுத்து அவரது குடும்பத்தினர் அங்கிருந்து அவசர அவசரமாக நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன் 1990 அவசர அம்புலன்ஸ் மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு தாயையும் குழந்தையையும் கொண்டுசென்றுள்ளனர்.

அதன் பின்னர் வைத்தியசாலையில் குழந்தையோடு அனுமதிக்கப்பட்டுள்ள பெண், தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கிளங்கன் ஆதார வைத்தியசாலை மருத்துவரிடம் கேட்டபோது, சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தையும் அதன் தாயும் நலமாக இருப்பதாகவும், பிறந்திருப்பது பெண் குழந்தை எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை விவகாரம் அரசாங்கத்துக்கு...

2025-03-17 15:29:36