இன்றைய தினம் நாட்டின் பல பிரதேசங்களில் சீரான காலநிலை காணப்படினும், சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மத்திய மாகாணத்திலும் பதுளை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
அதேவேளை நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலையை பார்க்க முடியும்.
மேலும், நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும்.
இதன்போது காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படலாம்.
மன்னாரில் இருந்து புத்தளத்தின் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.
அப்போது கடல் ஓரளவு கொந்தளிப்பாகவே இருக்கும். இதேவேளை நாட்டின் ஏனைய கடற்பரப்புகளில் சாதாரண அலையை காண முடியும் என கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM