ஓட்டமாவடியில் அரச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான கவனயீர்ப்புப் போராட்டம்

Published By: Nanthini

08 Feb, 2023 | 12:16 PM
image

ட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அரச பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணி நேற்று (7) செவ்வாய்க்கிழமை ஓட்டமாவடியில் இடம்பெற்றது.

எக்ஸத் ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்த இப்பேரணி சமூக மட்ட அமைப்புக்களின் பங்களிப்புடன் வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து ஆரம்பமாகி, மட்டக்களப்பு - கொழும்பு வீதியினூடாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தை அடைந்தது. 

அதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முகவரியிடப்பட்ட மகஜரினை பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் யூ.எல்.அப்துல் ஹமீட்டிடம் பேரணி ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்.

இந்த பேரணியில் கலந்துகொண்டோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தேர்ச்சியாக இடம்பெறும் அரச பயங்கரவாதத்தினை உடனடியாக நிறுத்தல், மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு தொடர்ந்து இடம்பெற்றுவரும் எல்லை பிரச்சினை, மீள்குடியேறிய காணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்ளாமை போன்றவற்றை வலியுறுத்தி, இப்பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கு  பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஓர் அதிகாரியை அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்லர். தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் ஒற்றுமையாக புரிந்துணர்வுடன் வாழ வேண்டும். நாங்கள் முஸ்லிம்களின் உரிமைகள் கிடைக்காமல் தடுக்கும் அதிகாரிகளை மாற்றி பக்கசார்பில்லாத அதிகாரிகளை நியமிக்க கோரிக்கை வைப்பதுடன், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23
news-image

மகனின் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற...

2023-03-23 13:32:04
news-image

அம்பாறையில் புடவைக்கடையில் தீ விபத்து

2023-03-23 11:47:29
news-image

சமாதானம், நல்லிணக்கத்திற்கான வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச்...

2023-03-23 15:59:03
news-image

வாய்மூல விடைக்கான கேள்விகளை காணி வழக்கு...

2023-03-23 12:23:34