பூகம்பம் - தொப்புள்கொடி துண்டிக்கப்படாத நிலையில் சிரியாவில் குழந்தை உயிருடன் மீட்பு

Published By: Rajeeban

08 Feb, 2023 | 06:11 AM
image

பூகம்பத்தினால் முற்றாக அழிந்துபோயுள்ள சிரியாவின் வடபகுதியில் இடிபாடுகளிற்குள் இருந்து பிறந்து சில மணிநேரங்களேயான குழந்தையொன்றை மீட்பு பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.

பேரழிவு நிகழ்ந்த சில நிமிடங்களின் பின்னர் குழந்தையை பிரசவித்துவிட்டு தாய் உயிரிழந்துள்ளார்.குழந்தையின் தந்தை நான்கு சகோதரர்களும் முன்னாதாக பூகம்பத்தில் பலியாகியுள்ளனர்.

ஜின்டேய்ரிஸ் பகுதியில் இடிபாடுகளிற்குள் இருந்து புழுதிபடிந்த குழந்தையொன்றை நபர் ஒருவர் காப்பாற்றிச்செல்வதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

அப்பிரினிற்கு அருகில் உள்ள மருத்துவமனையொன்றை சேர்ந்த வைத்தியர் ஒருவர் குழந்தை நல்லநிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜின்டேய்ரிஸ் நகரில் தரைமட்டமாகியுள்ள 50 கட்டிடங்களில் ஒன்றில் குழந்தையின் பெற்றோர் வாழ்ந்துவந்துள்ளனர்.

கட்டிடம் தரைமட்டமானதை அறிந்ததும் அந்த பகுதிக்கு விரைந்ததாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இடிபாடுகளை அகற்றிக்கொண்டிருந்தவேளை சத்தம் கேட்டது என அவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார். 

தொப்புள் கொடி துண்டிக்கப்படாத நிலையில் குழந்தையை பார்த்தோம் நாங்கள் அதனை துண்டித்து மருத்துவமனைக்கு கொண்டுசென்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவேளை அந்த பெண் குழந்தையின்  உடல் முழுவதும் சிராய்ப்புகள் காயங்கள் காணப்பட்ட என  மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்- ஆபத்தான நிலையிலேயே கொண்டுவந்தார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் குளிர் காரணமாக உடல்வெப்பநிலை குறைவடைந்த நிலையில் குழந்தையை கொண்டுவந்தார்கள் நாங்கள் உடல்வெப்பநிலையை அதிகரித்து கல்சியம் வழங்கினோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குழந்தையின் குடும்பத்தினருக்கு உறவினர்கள் ஒன்றாக மரணச்சடங்கை நடத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான் இன்னமும் உயிருடன் இருக்கின்றேன் -...

2023-04-01 14:34:48
news-image

நீதிமன்றத்தில் டிரம்பிற்கு கைவிலங்கிடமாட்டார்கள் - அதிகாரி...

2023-04-01 12:34:03
news-image

இத்தாலியில் ChatGPTக்கு தடை

2023-04-01 14:41:47
news-image

நேட்டோவில் புதிய அங்கத்தவராகிறது பின்லாந்து ;...

2023-03-31 17:11:38
news-image

டிரம்பை கைதுசெய்வார்களா? கைவிலங்கிடுவார்களா- சிறையில் அடைப்பார்களா?

2023-03-31 15:26:36
news-image

உருகி வரும் இமயமலை; மத்திய அரசு...

2023-03-31 14:47:53
news-image

சிட்னி பாலத்தின் மீது பாதுகாப்பற்ற விதத்தில்...

2023-03-31 13:30:36
news-image

ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் ஆஜராகுவார் என...

2023-03-31 13:10:19
news-image

ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறி சொத்தில்...

2023-03-31 11:20:21
news-image

பிலிப்பைன்ஸில் கப்பல் தீப்பற்றியதால் 31 பேர்...

2023-03-31 10:15:27
news-image

இந்தூர் ஆலய படிக்கட்டு கிணறு இடிந்ததால்...

2023-03-31 09:32:10
news-image

ட்ரம்பிற்கு எதிராக அமெரிக்காவின் நீதிபதிகள் உத்தியோகபூர்வமாக...

2023-03-31 09:19:48