(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (பெப் 06) ரயிலில் மோதுண்டு இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொடவில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் காலி - மாத்தறை பிரதான வீதியின் விஜய் மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் மாத்தறையில் இருந்து கண்டியில் நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த கார் சாரதி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 37 வயதுடைய உடகொதர, கம்புருகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.
அதேவேளை, வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் வெல்லவாய பிரதேசத்தில் தெதுறு ஓயா பாலத்திற்கு அருகில் உள்ள ரயில் கடவையில் பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 37 வயதுடைய பொதுப்பிட்டிய, தல்விட பகுதியைச் சேர்ந்த ஒருவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM