விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ். மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழும் இவர் விரைவில் தமிழில் வெளியாகவிருக்கும் 'டாடா' எனும் திரைப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதையை அவர் கேட்டபோது கண்ணீர் விட்டு அழுததாக தகவல்கள் வெளியானது.
இது தொடர்பாக அவர் விளக்கமளிக்கையில், “தமிழிலும் மலையாளத்திலும், நடித்திருந்தாலும் எம்மை கவர்ந்த நட்சத்திரங்கள் நிறைய இருப்பதால் யாரையும் குறிப்பிட்டு கூற முடியாது. 'டாடா' படத்தில் நடிகர்களை விட இசையமைப்பாளர் ஜென் மாட்டினின் பங்களிப்பு அதிகம். இந்தப் படத்திற்குப் பிறகு ஏராளமான வாய்ப்புகள் வரும் என நம்புகிறேன்.
இயக்குநர் கணேஷ், கேரளத்திற்கு வருகை தந்து எம்மை சந்தித்து, 'டாடா' படத்தின் கதையை சொல்லத் தொடங்கினார். கதையை கேட்கும் போது பல இடங்களில் எம்மையும் மீறி கண்களில் கண்ணீர் வந்தது. பிறகு இடைவேளை என்று இயக்குநர் சொன்ன போது அதிர்ந்தேன். ஏனெனில் முதல் பாதியில் ஏராளமான விடயங்கள் இடம்பெற்றிருந்தது. கதையின் நாயகிக்கு பல இடங்களில் உணர்வு பூர்வமாக நடிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. பிறகு கதையை முழுவதும் கேட்டு முடித்த பிறகு இதில் நான் நடிக்கிறேன். ஆனால்...! என்று இழுத்தேன். இந்த கதாபாத்திரத்தை எம்மால் சுமக்க இயலுமா? என்ற சிறிய தயக்கம் இருந்தது. அதனை உணர்ந்த இயக்குநர் கணேஷ், உங்களால் முடியும் என தன்னம்பிக்கை அளித்தார். அதன் பிறகே இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.” என்றார்.
திரையுலகில் கதையே கேட்காமல்... சம்பளம், உதவியாளர்களுக்கான ஊதியம், தங்குமிடம், கேரவன்.. என வசதிகளையும், சௌகரியங்களையும் மட்டுமே முதன்மையாக முன்னிறுத்தும் நட்சத்திர நடிகைகளின் மத்தியில்..., கதையை முழுவதுமாக கேட்டு, அதையும் உணர்வு பூர்வமாக கேட்டு, கண்ணீர் விட்ட நடிகை அபர்ணா தாசின் நடவடிக்கையை திரையுலக படைப்பாளிகள் வரவேற்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM