அந்த பெண் தனது மகள் பேரப்பிள்ளையுடன் தொடர்பிலிருந்துள்ளார் அவர் தரைமட்டமான கட்டிடத்திலேயே இருந்தார் ஆனால் அனைவரும் அந்த கட்டிடத்திலிருந்து வெளியேறிவிட்டனர் என கருதப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆனால் பின்னர் அவரின் கையடக்கதொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனதூதரகம் தெரிவித்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------
துருக்கி சிரியாவில் பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில் துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு துருக்கிக்கான இலங்கை தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் தூதரக பிரிவிற்கோ அல்லது அங்காராவில் உள்ள தூதரகத்திற்கோ தகவல்களை தெரிவிக்கமுடியும் என தூதுவர் ஹசாந்தி திசநாயக்க தெரிவித்துள்ளார்.
துருக்கியில் சுமார் 270 இலங்கையர்கள் வாழ்கின்றனர் இவர்களில் 14 பேர் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
13 பேர் பாதுகாப்பாக உள்ளமை உறுதியாகியுள்ளது ஒரு பெண்ணை தேடிவருகின்றோம் என தெரிவித்துள்ள தூதுவர் அவர் எங்கிருக்கின்றார் என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்,அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பெண் பூகம்பத்தினால் தரைமட்டமாகியுள்ள கட்டிடத்திலேயே வசித்து வந்தார் ஆனால் சம்பவம் இடம்பெற்றவேளை அவர் அங்குஇருக்கவில்லை என தூதுவர் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் தனது மகள் பேரப்பிள்ளையுடன் தொடர்பிலிருந்துள்ளார் அவர் தரைமட்டமான கட்டிடத்திலேயே இருந்தார் ஆனால் அனைவரும் அந்த கட்டிடத்திலிருந்து வெளியேறிவிட்டனர் என கருதப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
ஆனால் பின்னர் அவரின் கையடக்கதொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனதூதரகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM