துருக்கியில் பூகம்பம் தாக்கிய பகுதியில் வசித்த இலங்கையர்களின் நிலை என்ன? - தூதுவர் தகவல்

Published By: Rajeeban

08 Feb, 2023 | 01:24 PM
image

அந்த பெண் தனது மகள் பேரப்பிள்ளையுடன் தொடர்பிலிருந்துள்ளார் அவர் தரைமட்டமான கட்டிடத்திலேயே இருந்தார் ஆனால் அனைவரும் அந்த கட்டிடத்திலிருந்து வெளியேறிவிட்டனர் என கருதப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால் பின்னர் அவரின் கையடக்கதொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனதூதரகம் தெரிவித்துள்ளது.

--------------------------------------------------------------------------------------------

துருக்கி சிரியாவில் பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில் துருக்கியில் வசிக்கும் இலங்கையர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு  துருக்கிக்கான இலங்கை தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் தூதரக பிரிவிற்கோ அல்லது அங்காராவில் உள்ள தூதரகத்திற்கோ  தகவல்களை தெரிவிக்கமுடியும் என தூதுவர் ஹசாந்தி திசநாயக்க தெரிவித்துள்ளார்.

துருக்கியில் சுமார் 270 இலங்கையர்கள் வாழ்கின்றனர் இவர்களில் 14 பேர் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

13 பேர் பாதுகாப்பாக உள்ளமை உறுதியாகியுள்ளது ஒரு பெண்ணை தேடிவருகின்றோம் என தெரிவித்துள்ள தூதுவர் அவர் எங்கிருக்கின்றார் என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்,அந்த பெண்ணை கண்டுபிடிப்பதற்கு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பெண் பூகம்பத்தினால் தரைமட்டமாகியுள்ள கட்டிடத்திலேயே வசித்து வந்தார் ஆனால் சம்பவம் இடம்பெற்றவேளை அவர் அங்குஇருக்கவில்லை என தூதுவர் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் தனது மகள் பேரப்பிள்ளையுடன் தொடர்பிலிருந்துள்ளார் அவர் தரைமட்டமான கட்டிடத்திலேயே இருந்தார் ஆனால் அனைவரும் அந்த கட்டிடத்திலிருந்து வெளியேறிவிட்டனர் என கருதப்பட்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால் பின்னர் அவரின் கையடக்கதொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனதூதரகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் நல்லிணக்க செயன்முறைக்கு உதவத்தயார் -...

2023-03-29 21:29:15
news-image

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில்...

2023-03-29 21:28:07
news-image

தமிழர்களுக்கு எதிரான கலாசார ரீதியிலான இனவழிப்பில்...

2023-03-29 21:27:05
news-image

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கு 'செயற்திட்ட விளக்கம்'...

2023-03-29 21:26:20
news-image

எரிபொருள் விநியோகத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளமைக்கு...

2023-03-29 21:15:54
news-image

ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை...

2023-03-29 21:14:45
news-image

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் ஊழியர்களை பணியிலிருந்து...

2023-03-29 21:22:33
news-image

மக்களின் நலன் கருதி எரிபொருள் விலைகள்...

2023-03-29 21:25:24
news-image

பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலிக்காக ஜோசப் மைக்கல்...

2023-03-29 21:33:51
news-image

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் போராட்டம்

2023-03-29 21:32:47
news-image

பஸ் கட்டணம் 12.9 சதவீதத்தால் குறைப்பு...

2023-03-29 21:30:55
news-image

உயிர்த்தஞாயிறு தாக்குதல் - சாரா ஜஸ்மின்...

2023-03-29 21:20:10