மகனை பழிவாங்க தாயைக் கடத்தி கொலை செய்த நபர்கள் : சூரியவெவ சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

07 Feb, 2023 | 02:27 PM
image

சூரியவெவ பிரதேசத்தில்  பெண் ஒருவரைக்  கடத்திச் சென்று  கொலை செய்த  சம்பவத்தின்  பிரதான சந்தேக நபர்களாக கருதப்படும் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவனது நண்பர்கள்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மூவரும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று (06)  இரவு சூரியவெவ பொலிஸ் நிலையத்துக்கு சட்டத்தரணி ஒருவருடன்  சென்று சரணடைந்ததாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில்  இவர்கள் மூவரிடமும் சம்பவம் தொடர்பிலான வாக்குமூலங்களைப் பெற்று கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 சூரியவெவ, வீரகம வட்டரம் வீதியில் வசித்து வந்த  58 வயதுடைய பெண்ணே இவ்வாறு  கொலை செய்யப்பட்டவராவார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகனுடன் ஹோட்டல் உரிமையாளரின் மனைவி  சென்றமையே கொலைக்குக் காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்களுக்கு எதிரான கலாசார ரீதியிலான இனவழிப்பில்...

2023-03-29 21:27:05
news-image

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கு 'செயற்திட்ட விளக்கம்'...

2023-03-29 21:26:20
news-image

எரிபொருள் விநியோகத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளமைக்கு...

2023-03-29 21:15:54
news-image

ராகுல் காந்திக்கு கிடைத்த தண்டனை ஏற்பாடுகளை...

2023-03-29 21:14:45
news-image

எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் ஊழியர்களை பணியிலிருந்து...

2023-03-29 21:22:33
news-image

மக்களின் நலன் கருதி எரிபொருள் விலைகள்...

2023-03-29 21:25:24
news-image

பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலிக்காக ஜோசப் மைக்கல்...

2023-03-29 21:33:51
news-image

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் போராட்டம்

2023-03-29 21:32:47
news-image

பஸ் கட்டணம் 12.9 சதவீதத்தால் குறைப்பு...

2023-03-29 21:30:55
news-image

உயிர்த்தஞாயிறு தாக்குதல் - சாரா ஜஸ்மின்...

2023-03-29 21:20:10
news-image

வெடுக்குநாறி விவகாரம் - விசாரணை நடத்தி...

2023-03-29 15:16:04
news-image

ரணில் - ராஜபக்ஷர்கள் எதிர்கால அரசியலில்...

2023-03-29 12:19:10