எம்மில் பலரும் தோல்வியிலிருந்து மீளவும், கடனிலிருந்து விடுபடவும், தொடர்ந்து வெற்றி பெறவும், பணவரவு நீடித்து நிலைக்க வேண்டும் என்பதற்காகவும் ஜோதிட வல்லுநர்கள் பரிந்துரைக்கும் ஆலய பரிகாரம், வாழ்வியல் பரிகாரம், ஜோதிட ரீதியிலான பரிகாரம், விருட்ச பரிகாரம் என ஒவ்வொரு பரிகாரத்தையும் மேற்கொள்கிறார்கள்.
இந்த பரிகாரங்களில் சிலருக்கு விருட்சம் எனப்படும் மரங்களை பதியமிட்டு அதனை கண்காணிப்புடன் வளர்த்தெடுத்தால் நன்மையும், நல்ல பலனும் கிடைக்கும் என்பர்.
எம்மவர்களும் உடனடியாக விருட்ச பரிகாரங்களையும் செய்ய தயாராகுவர். அவர்களிடத்தில் நீங்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு ஏற்ற மரங்களின் பெயர்களை உச்சரித்து, அதனை குறிப்பிட்ட திசையில்... குறிப்பிட்ட இடத்தில்.. பதியமிட்டு வளர்த்து வாருங்கள் என அறிவுறுத்தி இருப்பார்.
சிலருக்கு இந்த விருட்ச பரிகாரம் உடனடியாக பலன் அளித்திருக்கும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த விருட்ச பரிகாரம் மேற்கொண்டவுடன் அவர்களுக்கு வீண் அலைச்சலும், மன உளைச்சலும் இதற்கு முன் இருந்ததை விட கூடுதலாக இருப்பதை காண்கிறோம். இந்நிலை ஏன்?
இது தொடர்பாக வேறு சில ஜோதிட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கும் போது, ‘ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மரங்களை பதியமிட்டால்... உங்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும்.
இதற்கு ஜென்ம நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் கோச்சார சந்திரன் தான் காரணம். இதற்கு பதிலாக நீங்கள் விருட்ச பரிகாரம், விரைவானதும், நிரந்தரமானதுமானப் பலனை அளிக்க வேண்டும் என்றால், உங்களின் பிராப்த நட்சத்திரம் என குறிப்பிடப்படும் நட்சத்திரத்திற்குரிய மரங்களை பதியமிட்டு வளர்த்தால், அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பலனும் கைகூடும்.
அதாவது நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து 19ஆவது நட்சத்திரத்தை தெரிவு செய்து, அந்த நட்சத்திரத்திற்குரிய மரங்களை தெரிவு செய்ய வேண்டும்.
அந்த நட்சத்திரத்தின் நான்கு பாதங்களில் ஏதேனும் ஒரு பாதத்தில் ஒரு கிரகம் நின்றிருந்தால்.. அந்த கிரகம் உங்கள் லக்னத்திற்கு சுபரா..! அசுபரா..! என்பதனை தெரிந்து கொண்ட பிறகுதான் விருக்ஷ பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அந்த 19ஆவது நட்சத்திரத்தின் நான்கு பாதங்களில் ஒன்றோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால், அந்த கிரகங்களின் வலிமை குறித்து ஆய்வு செய்து, அதன் பிறகு அந்த நட்சத்திரத்திற்குரிய மரங்களை பதியமிட வேண்டும். மேலும் 19 ஆவது நட்சத்திரத்திற்குரிய மரங்களை பதியமிட்ட உடன் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும் என்று உறுதியாக கூற இயலாது.
ஆனால் உங்களுக்கு இருந்த எதிர்மறை நிலை கணிசமாக குறையும். உங்களுக்கு சாதகமான திசா புத்தி நடக்கும் போது நீங்கள் முழுமனதுடன், நம்பிக்கையுடன் வைத்து காப்பாற்றி வரும் அந்த விருக்ஷத்தின் பலன்கள் வரம்பற்றுக் கிடைக்கும்.
எனவே நீங்கள் விருட்ச பரிகாரத்தை மேற்கொள்ளும் போது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மரங்களை பதியமிடாமல், ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 19ஆவது நட்சத்திரம் எது? என்பதை தெரிந்து அந்த நட்சத்திரத்திற்குரிய மரத்தை பதியமிட்டால் பலன்கள் கிடைக்கும்.
சுப யோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM