(எம்.மனோசித்ரா)
டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துன்கொட இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துன்கொட கடந்த ஆண்டு நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழலின் போது, மக்களைத் தூண்டும் வகையில் காணொளிகளை பதிவேற்றியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்கிய வாக்குமூலத்தை உதாசீனப்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் விமான நிலையத்தில் குடிவரவு - குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அவர் கடந்த ஆண்டு மே 31 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலமளித்துள்ளார். இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக கடந்த ஜனவரி 20 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் , அவர் முன்னிலையாகியிருக்கவில்லை.
அதற்கமைய குற்றப்புலனாய்வு பிரிவு தர்ஷன ஹந்துன்கொட நாட்டிலிருந்து வெளியேற தடை விதிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வெளிநாட்டு பயணத்தடையைப் பெற்றுக் கொண்டது. எவ்வாறிருப்பினும் தர்ஷன ஹந்துன்கொட நீதிமன்றத்துக்கு அறிவிக்காமல் பயணத்தடையை மீறி வெளிநாடு சென்றிருந்தார்.
இந்நிலையிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடு திரும்பிய அவர் குடிவரவு - குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து , இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM