சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துன்கொட கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

Published By: Digital Desk 3

06 Feb, 2023 | 04:53 PM
image

(எம்.மனோசித்ரா)

டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துன்கொட இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துன்கொட கடந்த ஆண்டு நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழலின் போது, மக்களைத் தூண்டும் வகையில் காணொளிகளை பதிவேற்றியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வழங்கிய வாக்குமூலத்தை உதாசீனப்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் விமான நிலையத்தில் குடிவரவு - குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் அவர் கடந்த ஆண்டு மே 31 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலமளித்துள்ளார். இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக கடந்த ஜனவரி 20 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும் , அவர் முன்னிலையாகியிருக்கவில்லை.

அதற்கமைய குற்றப்புலனாய்வு பிரிவு தர்ஷன ஹந்துன்கொட நாட்டிலிருந்து வெளியேற தடை விதிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வெளிநாட்டு பயணத்தடையைப் பெற்றுக் கொண்டது. எவ்வாறிருப்பினும் தர்ஷன ஹந்துன்கொட நீதிமன்றத்துக்கு அறிவிக்காமல் பயணத்தடையை மீறி வெளிநாடு சென்றிருந்தார்.

இந்நிலையிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடு திரும்பிய அவர் குடிவரவு - குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து , இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28