பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 12...!

Published By: Robert

26 Dec, 2016 | 09:15 AM
image

இந்­தோ­னே­ஷியா சுமத்ரா தீவில் ஏற்­பட்ட கட­லுக்­க­டி­யி­லான நில­ந­டுக்கம் சுனாமி ஆழி பேர­லை­யாக இலங்கை உட்­பட பல நாடு­க­ளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்சம் மனித உயிர்­களை பறித்தும் பல்­லா­யிரம் கோடி­க­ளுக்கு பொரு­ளா­தார பேரி­ழப்பை ஏற்­ப­டுத்தி நாம் கண்ணீர் சிந்­தி­ய­தையும் மறந்­துவிட முடி­யாது.

ஒரு சில நிமி­டங்­களில் ஆசியா கண்­டத்தின் 10 நாடு­களில் அவற்றை ஒட்­டி­யுள்ள தீவு­களில் மூன்று இலட்சம் வரை­யான மக்கள் அழிந்­தனர். ஆசியா தன் வரை படத்தில் சில கிரா­மங்­களை இழந்து விட்­டி­ருந்­தது. அவற்றில் பல மனி­தர்­களால் நிரந்­த­ர­மாக கைவி­டப்­பட்ட கிரா­மங்­க­ளா­கவும் போய்­விட்­டன.

சுனாமி ஏற்­பட்டு  12 வரு­டங்கள் கடந்­தி­ருக்­கின்­றது. ஆனால் அதன் வடுக்­க­ளி­லி­ருந்து இன்னும் இலங்­கையின் சில பகு­திகள் மீளாத நிலையில் உள்­ளது.  இங்கு கவ­னிக்­கத்­தக்க விடயம் யாதெனில் பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த பிர­தேசங்­களை மிக விசேட கவனம் செலுத்தி மீள் கட்­டு­மான வேலைகள் அதி தீவி­ர­மாக கடந்த 2005, 2006 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் நடந்­தேறி முடிந்­துள்­ளது. ஆனால் எமது சில பிர­தே­சங்கள் கவ­னிப்­பா­ரற்று கிடக்­கின்­றன.  அக்­க­ரைப்­பற்­றிலும் அதனை அண்­டிய  பிர­தே­சங்­க­ளிலும் சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கென்று சவூதி அரே­பிய அர­சினால் கட்­டப்­பட்ட வீட்­டுத்­திட்டம் இன்னும் உரி­ய­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. இது கானல் நீரான கதை­யாகிப் போயுள்­ளது. தற்­போது இந்த வீடுகள் விஷ ஜந்­துக்­களும் மிரு­கங்­க­ளுக்­கு­மான குடி­யி­ருப்­பாக மாறி­யி­ருக்­கின்­றது. அது மாத்­தி­ர­மல்­லாமல் பல்­வேறு குற்றச் செயல்­களும் அங்கு இடம்­பெற்று வரு­கின்­றன. இந்த விட­யத்தில்  ஒட்­டு­மொத்த முஸ்லிம்  அர­சி­யல்­வா­தி­களும் படு­தோல்வி அடைந்­துள்­ளனர்.  பேரி­ன­வாத சக்­தி­களின் விடாப்­பி­டி­யான துவேச நிலை­மைகள் அர­சி­யல்­வா­தி­களின் பொடு­போக்கு என்­பன இதற்குக் கார­ணங்­க­ளாகும். 

இவ்­வா­றான ஒரு இயற்­கையின் சீற்றம் ஏற்­ப­டும்­போது மக்­களே விழிப்­பா­கவும் சிறப்­பா­கவும் தங்­களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்­பதை கடந்­த ­சு­னாமி பேர­ழிவு  எமக்கு பாடம் சொல்லிக் கொண்­டி­ருக்­கி­றது.

சுமத்ரா தீவுப் பகு­தியில் ஏற்­பட்ட பூகம்பம் 8.9 ரிச்டர் அளவு பதி­வா­கி­யுள்­ளது. கடற்­ப­ரப்பில் ஏற்­பட்ட இதே­வே­க­முள்ள நில­ந­டுக்கம் தரைப் பகு­தியில் ஏற்­பட்­டி­ருந்தால் ஆசி­யாவின் பல நாடுகள் தரை மட்­ட­மா­கி­யி­ருக்கும். இதன் பாதிப்பு பல ஆயிரம் அணு­குண்­டுகள் வெடித்­த­தற்குச் சம­மாக இருக்கும் என்று புவி­ய­மைப்­பியல் வல்­லு­நர்கள் அப்­போது தெரி­வித்­தி­ருந்­தனர்.

அதுபோல் அண்­மை­யிலும் பசுபிக் பெருங்­க­டலில் அவுஸ்தி­ரே­லி­யா­வுக்கு அருகே உள்ள தீவு நாடான பப்­புவா நியூ­கி­னி­யாவின்  தரோன் நகரில் மிக பயங்­க­ர­மான நில­ந­டுக்கம் ஏற்­பட்­டது. இது ரிச்­டரில் 8 ஆக பதி­வாகி இருந்­தது. இதை­ய­டுத்து பப்­புவா நியூ­கி­னி­யாவின் கிழக்குப் பகு­தியை சுனாமி பேர­லைகள் தாக்கும் என எச்­ச­ரிக்­கையும் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அதுபோல் உலகின் பல்­வேறு நாடு­க­ளிலும் அடிக்­கடி இந்­நில நடுக்கம் ஏற்­ப­டு­வதும் சுனாமி எச்­ச­ரிக்கை விடுக்­கப்­ப­டு­வதும் தற்­போதும் நிகழ்ந்­த­வண்­ணமே உள்­ளது. 

இயற்கை அழி­வுக்கு முகம் கொடுத்தல்

சுனாமி போன்ற தாக்­கங்­களை நாம் எதிர்­கொண்ட போது உல­கத்தின் மீதுள்ள பற்று கார­ண­மாக கொஞ்சம் கொஞ்­ச­மாக ஆயுள் முழு­வ­தையும் செலவு செய்து சேக­ரித்து கொண்ட பொருட்கள் சில நொடி­களில் அழிந்து போனது. அதே­போன்று மர­ணத்­தி­லி­ருந்தும் எம்மால் தப்ப முடி­யாது போனது என்­பது எமக்கு முன்­னுள்ள படிப்­பி­னை­யாகும்.

உலகில் சுனாமி, பூகம்பம், புயல், மழை வெள்ளம், எரி­மலை வெடிப்­புக்கள் என பல நடந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன. கடந்த 100 வரு­டங்­களில் மிகவும் மனித இனத்தை பாதித்த சம்­ப­வங்­க­ளாக 1923-ஆம் ஆண்டு ஜப்­பானில் ஏற்­பட்ட பூகம்­பத்தில் ஒரு இலட்­சத்து நாற்­ப­தா­யிரம் பேர் இறந்­தனர். 1935 இல் இந்­தி­யாவின் குவெட்­டாவில் 50,000 பேரும், 1939ல் சிலியில் 28,000 பேரும், அதே ஆண்டு துருக்­கியில் 33,000 பேரும், 1960இல் மொரோக்­காவில் 12,000 பேரும், 1976 இல் சீனாவில் இரண்டு இலட்­சத்து நாற்­ப­தா­யிரம் பேரும், அதே ஆண்டு கௌத­மா­லாவில் 23,000 பேரும், 1978 இல் ஈரானில் 25,000 பேரும், 1985இல் மெக்­ஸிக்­கோவில் 9,500 பேரும், 1988இல் ஆர்­மீ­னி­யாவில் 25,000 பேரும், 1990இல் ஈரானில் 50,000 பேரும், 1993இல் இந்­தி­யாவின் லட்­டூரில் 10,000 பேரும், 1995இல் ஜப்­பானில் 6,000 பேரும், 1998இல் ஆப்­கா­னிஸ்தான் மற்றும் தாஜிஸ்­தானில் 5,000 பேரும், 1999 இல் துருக் கியில் 17,000 பேரும், 2001இல் குஜ­ராத்தில் 13,000 பேரும், 2003இல் ஈரானில் 41,000 பேரும் பூகம்­பத்தால் உயிரிழந்துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவை பேர­ழிவு ஏற்­ப­டுத்­திய பூகம்­பங்­களின் பட்­டியல்.

இவை தவிர, சில ஆயி­ரக்­க­ணக்கில் பலி கொண்ட பூகம்­பங்­களும் உண்டு. இவை மனித இனத்தை பெரிதும் பாதித்­தாலும் மிருக இனங்கள் பெரிதும் தப்­பி­க்கொள்­வ­தாக ஆய்­வுகள் சுட்­டி­க்காட்­டு­கின்­றன. இவை அனைத்தும் மனி­தனை தூய்­மைப்­ப­டுத்­தவும், சிந்­திக்­கவும் வைத்­தது.

அனர்த்­தங்கள் சம்­ப­விக்கும் வேளை­களில் அவற்­றிற்கு ஆயத்­த­மாகும் முக­மாக அனர்த்த முன்­னா­யத்த திட்­டங்கள், அறி­வூட்டல், அனர்த்த அறி­விப்பு ஒலி­யெ­ழுப்பல்,   சகல மட்­டங்­க­ளிலும் விருத்­தி­யாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இலங்கை அனர்த்த முகா­மைத்­துவ சட்டம் மற்றும் தேசிய அனர்த்த முகா­மைத்­துவ கொள்­கை  ­ஆ­கி­ய­வற்­றி­லும் ­இந்த விட­யங்கள் தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அனர்த்­த ­மு­கா­மைத்­து­வம் ­பல்­வேறு செயற்­பாட்­டா­ளர்­களைக் கருத்தில் கொண்டு கட்­டளை இடுதல் கட்­டுப்­ப­டுத்­தல்­களை விட ஒருங்­கி­ணைப்பை வலி­யு­றுத்தும் விதத்தில் நிறு­வக மாதி­ரிகள் கட்­ட­மைக்­கப்­பட்­டுள்­ளன. எவ்­வா­றா­யினும் கட்­டளை இடு­தலும், கட்­டுப்படுத்தப்ப­டு­தலும் ஒவ்வொரு அரச நிறு­வன அதி­கா­ரி­க­ளுக்­கி­டை­யி­லேயே பொருந்­தக்­கூடும். ஒப்­ப­டைக்­கப்­பட்ட பணி, பொறுப்­புக்கள் மற்றும் ஆற்றல் வாய்ந்த முக­வர்­க­ளுக்­கி­டை­யே­யான ஒருங்­கி­ணைப்­புமே முக்­கிய அம்­சங்­க­ளாகும். அனர்த்த முகா­மைத்­துவ மற்றும் மனித உரி­மைகள் அமைச்சு, அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் ஒட்­டு­மொத்த அதி­கா­ரத்தைக் கொண்டு இருக்­கையில் மாகாண அனர்த்த முகா­மைத்­துவ ஒருங்­கி­ணைப்பு பிரிவு, மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ ஒருங்­கி­ணைப்புப் பிரிவு, மாகாண, மாவட்ட, உள்­ளூராட்சி, பிர­தேச, கிராம சேவை­யாளர் மட்­டங்­களில் பதி­லி­றுப்பு, மீளுமை பிர­யத்­த­னங்கள்,முகா­மைத்­துவம், அவ­சர தக­வல்­களைப் பரப்பல் போன்­ற­வற்­றிற்­கான ஒருங்­கி­ணைப்புப் பிரி­வாக செயற்­ப­டு­கி­றது. இது நிரு­வாக கட்­ட­மைப்பு விட­யங்­க­ளாகும்.

சுனா­மி ­வ­ர­லாறு

கி.மு. 426 கிரேக்க வர­லாற்­றா­சி­ரியர் தியு­சிடைட்ஸ், சுனாமி ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களை 'பிலோப்­போ­னே­சியப் போர் வர­லாறு' என்ற புத்­த­கத்தில் கூறி­யுள்ளார். அவர் தான் முதன் முதலில் கடலில் நில­ந­டுக்கம் ஏற்­பட்­டது என்றும், எந்த இடத்தில் நில நடுக்கம் கடலில் உண்­டா­னதோ அங்கு கடல் உள்­வாங்கும். பின்பு திடீர் பின்­வாங்­கு­தலும், மறு இரட்டை சக்­தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்­ப­டு­கி­றது. நில­ந­டுக்கம் ஏற்­ப­டாமல் இப்­படி ஒரு விபத்து ஏற்­பட வாய்ப்பே இல்லை என ­அ­வர் ­கு­றிப்­பிட்­டுள்ளார். கி.பி. 365 இல் அலெக்­சாந்­தி­ரி­யாவில் மிகப் பெரிய அழி­வுக்­குப்பின் ரோமன் வர­லாற்­றா­சி­ரியர் அம்­மி­யனஸ் மாசில்­லினுஸ் சுனாமி என்­பது, நில நடுக்­கத்தில் தொடங்கி கடல் நீர் பின்­ன­டைவு, அதைத் தொடர்ந்­து ­இ­ராட்­சத அலை என்ற தொடர்ச்­சி­யான நிகழ்­வாக அமை­கி­றது என்றார். அதா­வது, நில­ந­டுக்கம் என்­பது நிலப்­ப­கு­தியில் கடல் பகு­தியில், மலைப்­ப­கு­தியில் ஏற்­படும். நிலப்­ப­கு­தியில் வந்தால் நிலத்தில் உள்­ளவை அதிர்ந்து சேத­மா­கி­றது. கடலில் வந்தால் கடலின் ஆழ­மான பகு­தி­யி­லுள்ள நிலத்­தட்­டுக்­களின் அசைவு பெரிய அலை­களை உரு­வாக்­கு­கின்­றது. மலையில் எரி­ம­லை­யாக உரு­வெ­டு­கி­ன்றது. பல ­இ­லட்சம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஒரே நிலத்­தட்­டுத்தான் இருந்­தது. அதன் மீது தான் பூமி இருந்­தது. ஆனால் கண்­டங்­க­ளாகப் பிரியப் பிரி­ய ­அதன் தட்­டு ­வெப்ப இயற்கை சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ப, பல்­வேறு நிலத்­தட்­டுக்கள் உரு­வா­கின. இந்தத் தட்­டுக்­க­ளின்­மீ­துதான் ஒவ்­வொரு கண்­டமும் இருக்­கின்­றன. நிலம், கடல் எல்­லா­வற்­றையும் தாங்கி நிற்­பது இந்த நிலத்­தட்­டுக்கள் தான். இதைத் தான் 'டெக்­டானிக் பிளேட்கள்' என்று புவி­யியல் நிபு­ணர்கள் கூறு­கின்­றனர்.

ஆராய்ச்­சி­யா­ளர்கள் கூற்­றுப்­படி, கி.மு. 365 ஆம் ஆண்­டு ­ஜூலை 21 ஆம் தேதி கிழக்கு மத்­திய தரைக்­க­ட­லில் ­இவ்­வா­று ­தோன்றி, எகிப்தில் அலெக்­சாண்­டி­ரி­யாவில் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அதிர்­வினால் உரு­வாக்­கப்­பட்ட சுனாமி

கடல் படு­க்கையில் திடீ­ரென ஏற்­படும் மாற்­றத்தால் மேலி­ருக்கும் தண்ணீர் செங்­குத்­தாக இட­மாற்றம் அடை­வதால் சுனாமி உரு­வாகும். டெக்­டானிக் நில­ந­டுக்­கங்கள், பூமியின் புவி ஓடு உருக்­கு­லை­வதால் உண்­டாகும். இது கட­லுக்கு அடியில் ஏற்­படும் போது சிதைக்­கப்­பட்ட பகு­தி­யி­லுள்ள தண்ணீர், சம­நி­லையில் இருந்து இடம் பெயர்­கி­றது. டெக்கான் தட்­டு­களின் தவ­றான சுழற்சி கார­ண­மாக, செங்­குத்­தாக நீர் இடப்­பெ­யர்ச்சி செய்­யப்­ப­டு­கி­றது. இயக்­கத்தில் ஏற்­படும் சாதா­ரண தவ­று­க­ளாலும் கடல் படு­க்கையில் இடப்­பெ­யர்ச்சி ஏற்­படும். ஆனாலும் இவை பெரிய சுனா­மியை உண்­டாக்­கு­வது இல்லை. சுனா­மிகள் ஒரு சிறிய அலை வீச்சும், மிக நீண்ட அலை நீளமும் உடை­யவை சாதா­ரண கடல் அலை 30 அல்­லது 40 மீற்றர் அலை­நீளம் உள்­ளவை. ஆனால் சுனாமி அலைகள் சில நூறு கிலோ மீற்றர் நீளம் உடை­யவை. இவை கடல் பரப்­பை­விட 300 மில்லி மீற்றர் மேலே சிறிய வீக்கம் போன்று உரு­வாகும். அவை தாழ்­வான நிலை அடையும் போது மிக அதிக உய­ர­மாக மேலெ­ழு­கி­றது. சுனா­மியின் சிறிய அலை­கூட கட­லோ­ரப்­ப­கு­தியை மூழ்­க­டித்து விட முடியும்.

ஏப்ரல் 1946, அலாஸ்­காவில் அலேடன் தீவு­க­ளுக்கு அருகில் 7.8 ரிச்டர் அள­வுகள் பூகம்பம் ஏற்­பட்­டது. இதனால் 14 மீற்றர் உய­ரத்­திற்கு அலை மேலே எழுந்து ஹவாய் தீவில் உள்ள ஹிலோ என்ற இடத்­தையே அழித்து விட்­டது. பசுபிக் பெருங்­கடல் தரையில் அலாஸ்கா கீழ் ­நோக்கித் தள்­ளப்­பட்­டதால், உண்­டான பூகம்­பமே இதற்குக் காரணம். குறுகும் எல்­லை­களில் இருந்தும் ஸ்டாரிக்கா என்ற இடத்தில் 8,000 வரு­டங்­க­ளுக்கு முன் சுனாமி தோன்­றி­யது. கிராண்ட் பேங்க் 1929, பப்­புவா நியுகினியா 1998 (டப்பின் 2001) சுனா­மிகள் ஏற்­படக் காரணம் பூகம்­பத்தின் மூலம் உண்­டான வண்டல் கடலில் சென்று கலந்­ததால் உண்­டா­னது. ஸ்டாரிக்கா வண்டல் தோல்­விக்குச் சரி­யான காரணம் தெரி­ய­வில்லை. அதி­கப்­ப­டி­யான வண்­டல்கள், ஒரு நில­ந­டுக்கம் அல்­லது எரி­வாயு ஹைட்ரேட் வெளி­யா­னது (மீத்தேன் போன்ற வாயுக்கள்) கார­ண­மா­கவும் ஏற்­பட்­டி­ருக்­கலாம். 1960 வால்­டி­வியா பூகம்பம் (9.5 ஆறு), 1964 அலாஸ்கா பூகம்பம் (9.2 ஆறு), 2004இல் இந்­தியப் பெருங்­கடல் நில­ந­டுக்கம் மற்றும் 2011இல் தோஹூ பூகம்பம் (9.0 ஆறு) போன்­றவை சமீ­பத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நீள் ஊடு­ருவு பூகம்­பங்கள். ஜப்­பானில் சிறிய (4.2 ஆறு) பூகம்பம் ஏற்­பட்டு அரு­கி­லுள்ள கரை­யோரப் பகு­தி­களை ஒரு சில நிமி­டங்­களில் பாழ்­ப­டுத்­தி­யது.

நிலச்­ச­ரி­வு­களால் உரு­வாக்­கப்­பட்ட சுனாமி

1950களில் பெரும் நிலச்­ச­ரி­வுகள் மூலம் தான் பெரிய சுனா­மிகள் உண்­டா­னது என்று நம்­பப்­பட்­டது. நீருக்­க­டியில் ஏற்­படும் நிலச்­ச­ரி­வு­களால் ஏற்­படும் சுனா­மியை 'சியோ­ருக்கஸ்' என்று அழைத்­தனர். இதனால் அதிக அளவு நீர் இடப்­பெ­யர்ச்சி செய்­யப்­ப­டு­கி­றது ஏனெனில் நிலச்­ச­ரி­வினால் உண்­டாகும் கழி­வுகள் அல்­லது விரி­வாக்­கத்தால் உண்­டாகும் சக்தி திரும்­பவும் நீருக்­குள்­ளேயே செலுத்­தப்­படு­கி­றது. 1958இல் மிகப்­பெ­ரிய நிலச்­ச­ரிவு, அலாஸ்­காவின் லிடுயா விரி­குடா பகு­தியில் ஏற்­பட்­ட­போது 524 மீற்றர் உய­ரத்­திற்கு (1700 அடிக்­குமேல்) அலை ஏற்­பட்­டது.

சுனாமி பண்­புகள்

சுனா­மிகள் இரு வழி­களில் சேதத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. பெரு­ம­ளவு சக்­தி­யுள்ள பெரிய அலை (நீரலை) அதிக வேகத்தில் செல்­வ­தாலும், அலைகள் பெரிய அளவு இல்­லா­விட்­டாலும் நிலப்­ப­கு­தியை மொத்­த­மாக அழித்து, எல்லாப் பொருட்­க­ளையும் தன்­னுடன் எடுத்துச் சென்று விடு­வ­தாலும் பெரும் சேதம் ஏற்­ப­டு­கி­றது. 

மிகப்­பெ­ரிய சுனா­மியைத் தவிர, நெருங்­கிய அலை­களை உடைக்க முடி­யாது. மாறாக ஒரு வேக­மாக நகரும் அலை­களின் துவாரம் போன்று தெரியும். விரி­கு­டாக்கள் மற்றும் மிகவும் ஆழ­மான நீர் ­அ­ருகில் சுனா­மிகள் உண்­டானால் அவை சுனா­மியை ஒரு படிக்கட்டு போன்றும், ஒரு செங்குத்தான அலையாகவும் மாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் ஜப்பானிய மொழியில் இதனை 'துறைமுக அலை' என்று கூறுவர். சில நேரங்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மீன்பிடிக்கும் போது எந்த அசாதாரண அலையையும் உணராமல், கரைக்குத் திரும்பி வந்த பின் கிராமமே பெரிய கடலலையால் அழிவுற்றதைக் கண்டுள்ளனர். இது நாம் கண்ட சுனாமி பேரலையிலும் நடந்ததை சுட்டிக்காட்ட முடியும். சுனாமியின் உச்ச அலை கரையை அடையும் போது, கடல் மட்டம் தற்காலிகமாக உயரும். இதை 'ரன்' என்று குறிப்பிடப்படுகிறது. இவை கடல் மட்டத்திற்கு மேலிருந்து அளக்கப்படுகிறது. அலை உச்சிகளுக்கு இடையில் பலமடங்கு அலைகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து வந்தால், அதைப் பெரிய சுனாமி என்கிறோம்.

சுனாமி பேரலை தாக்கி 12 வருடங்கள் கழியும் நிலையில் சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய அறிவினை பெற்றுக் கொள்வதே மனிதர்கள் அதிலிருந்து ஓரளவு தம்மை தற்காத்துக் கொள்ள சிறந்த வழி ஒன்றாகும். வெறுமனே நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தி ஒவ்வொரு வருடமும் இழந்த உயிர்கள், உடமைகளை நினைத்து அழுது புலம்பி கட்டிப் புரள்வதில் எவ்வித பயனும் மக்களுக்கு ஏற்பட்டு விடப்போவதில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48