(எம்.வை.எம்.சியாம்)
மகனை தேடி காரில் வந்த மூவர், அவர் இல்லாத நிலையில் தாயை கடத்திச் சென்றுள்ளனர். அதனையடுத்து நேற்று (4) எம்பிலிப்பிட்டிய பகுதியில் குறித்த தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணை காரில் வந்த மூவர் கடத்திச் சென்றதாக குறித்த பெண்ணின் மகன் சூரியவெவ பொலிஸில் கடந்த 3ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே எம்பிலிப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வைத்தியசாலை வீதியில் வைத்து பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இது குறித்து பொலிஸார் கூறுகையில்,
சூரியவெவ, வீரியகம பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் மகன் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அவர் அந்தப் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொழில் புரிந்தபோது அதன் உரிமையாளர் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தி, பின்னர் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஹோட்டலின் உரிமையாளரும், மேலும் இருவரும் காரில் வந்து மகனை தேடியுள்ளனர்.
எனினும், மகன் அங்கே இல்லாததால் அவரின் தாயான குறித்த பெண்ணை காரில் கடத்திச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய மற்றும் சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM