யானை கஜமுத்துக்களை இரகசியமாக விற்பனை செய்ய முயன்ற இளைஞனை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
அம்பாறை, கல்முனை புறநகர் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (3) இரவு சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நடமாடுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் குறித்த இளைஞனை கைதுசெய்தனர்.
இதன்போது கைதான சந்தேக நபரிடமிருந்து யானை தந்தத்துக்குள் இருக்கின்ற கஜமுத்துக்கள் நான்கினை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கஜமுத்துக்களை வைத்திருந்த காரணத்தினால் கைதுசெய்யப்பட்ட இவ்விளைஞன் திருகோணமலை கந்தளாய் பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும், கைதுசெய்யப்பட்ட நபர் உள்ளடங்கலாக சான்று பொருட்கள் யாவும் சம்மாந்துறை பகுதியிலுள்ள ஜீவராசிகள் திணைக்கள பிரிவிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM