தேர்தலுக்கு அச்சமில்லை : தேர்தல் செலவுகளுக்கு அச்சம் - நிதி இராஜாங்க அமைச்சர்

Published By: Vishnu

05 Feb, 2023 | 05:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் யோசனை அரசாங்கத்திற்கு கிடையாது.

தேர்தலுக்கு அஞ்சவில்லை, தேர்தல் செலவுகளுக்கு அச்சமடைகிறோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு 

கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்கூறுகையில், 

அரச செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் சகல அரச நிறுவனங்களுக்கும் விசேட சுற்று நிரூபனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமைச்சுக்களின் செலவுகளை குறைப்பதற்கும் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. செலவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் தற்போது வெற்றியடையடைந்துள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது. சிறந்த முகாமைத்துவத்தினால்  எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கான வரிசை யுகம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நாட்டின் நிதி நிலைமையை கருத்திற் கொண்டு அனைத்து தீர்மானங்களும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் சிவில் பிரஜை ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுவில் நிதியமைச்சின் செயலாளர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளது. நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடும் வகையில் அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஒரு பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

தேர்தலை அஞ்ச வேண்டிய தேவை எமக்கு கிடையாது, இருப்பினும் தேர்தல் செலவுகளை கண்டு அச்சமடைகிறோம்.

நாணயம் அச்சிடுவதற்கு மட்டுப்பாடுகள் காணப்படுகின்ற நிலையில் அரச செலவுகள் இயலுமான அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறன பின்னணியில் தேர்தலுக்காக நிதி அச்சிட்டால் பணவீக்கம மீண்டும் உயர்வடைந்து பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கால வரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை...

2023-03-23 17:24:22
news-image

20 இலட்சம் முட்டைகள் இறக்குமதி :...

2023-03-23 16:37:54
news-image

7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ...

2023-03-23 16:49:28
news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14