இலங்கை சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்ய சாய் சேவா நிலையம் (சாயி சுந்தரம்) நாளை (5) ஞாயிற்றுக்கிழமை வைபவ ரீதியாக கிளிநொச்சி ஜெயந்தி நகரில் வட மத்திய பிராந்தியம் ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச நிறுவனத்தின் தலைவர் அ.தவீசன் தலைமையில் திறந்துவைக்கப்படவிருக்கிறது.
இலங்கையில் சத்ய சாயி சர்வதேச நிறுவனம் ஐந்து பிராந்தியங்களில் அதாவது வட பிராந்தியம், வடமத்திய பிராந்தியம், மத்திய பிராந்தியம், தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் தனது சேவைகளை ஆற்றி வருகின்றமை எல்லோரும் அறிந்த விடயம்.
அந்த வகையில் வட மத்திய பிராந்தியத்தில் வவுனியா திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார், அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சத்ய சாயி நிறுவனம் பல்வேறுபட்ட கல்வி, ஆன்மிகம் மற்றும் சேவைத் திட்டங்களை பல நெருக்கடியான சூழ்நிலைகளிலும் செய்து வருகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தம் முடிவடைந்து மீளக்குடியேறிய மக்களுக்கு இந்த நிலையம் பல ஆண்டுகளாக சேவையாற்றி வந்தாலும், இந்நிலையத்துக்கென தனியாக ஒரு நிரந்தர கட்டடம் இருக்கவில்லை.
இந்நிலையில் இலங்கை சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தின் தேசிய சபை தலைவர் வி.மனோகரன் இந்த சேவை நிலையத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் நிரந்தர கட்டடம் தேவை என்பதனை உணர்ந்து, அதனை நிர்மாணிப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகளை முன்னெடுத்தார்.
கடந்த வருடம் மார்ச் 6ஆம் திகதி கட்டடத்துக்கான அடிக்கல் வைக்கப்பட்டது. அதன் பின் படிப்படியாக வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு, நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தன.
இக்கட்டடம் புதுப் பொலிவுடன் நாளைய தினம் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM