சவால்களுக்கு நீங்கள் தனித்து முகங்கொடுக்கவில்லை என்பதை தெரியப்படுத்தவே நான் இங்கு வந்தேன் - பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் இலங்கையர்களுக்கு தெரிவிப்பு

Published By: Digital Desk 5

04 Feb, 2023 | 06:34 PM
image

(நா.தனுஜா)

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் உறுதியளித்துள்ளார். 

அரசாங்கத்தின் அழைப்பையேற்று சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீஸியா ஸ்கொட்லன்ட், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றின் அழுத்தங்களால் இலங்கை மாத்திரமன்றி மேலும் பல நாடுகள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றன என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், எனவே 56 உறுப்புநாடுகளைக்கொண்ட பொதுநலவாய அமைப்பானது, நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் உறுப்புநாடுகளின் மீட்சிக்கு அவசியமான ஆதரவை வழங்கும் நோக்கில் ஒன்றிணைந்து செயலாற்றிவருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்களினால் ஏற்பட்ட சுமையை இலங்கை தொடர்ந்து உணர்கின்றது (சுமக்கின்றது) என்பதை நான் அறிவேன்.

சுமையைத் தாங்குவதென்பது மிகவும் கடினமானதாகவும், அச்சுறுத்தக்கூடியதாகவும் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள பற்றீஸியா ஸ்கொட்லன்ட், இருப்பினும் 'இந்த சவால்களுக்கு நீங்கள் தனித்து முகங்கொடுக்கவில்லை' என்பதை அனைத்து இலங்கையர்களுக்கும் தெரியப்படுத்துவதற்காகவே நான் இங்கு வந்திருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22