பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்கள் இராஜிநாமா

Published By: Digital Desk 5

04 Feb, 2023 | 02:44 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது பதவியை இராஜிநாமா செய்துள்ளனர்.

மொஹான் சமரநாயக்க மற்றும் பீ.கே.யு.ஏ.விக்கிரமசிங்க ஆகியோரே இவ்வாறு இராஜிநாமா செய்துள்ளனர்.

இவ்விருவரும் தமது இராஜிநாமா கடிதங்களை நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மற்றும் குறித்த இரு உறுப்பினர்களுக்குமிடையில் மின்துண்டிப்பு தொடர்பில் அண்மையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

இது தொடர்பில் மொஹான் சமரநாயக்க மற்றும் பீ.கே.யு.ஏ.விக்கிரமசிங்க ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு மின்துண்டிப்பை நடைமுறைப்படுத்தாதிருக்குமாறு இவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தொழிற்சங்க உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாதிருக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்தோடு மின் துண்டிப்பிற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்சாரசபைக்கு அனுமதி வழங்கப்படவுமில்லை.

இவ்விவகாரத்திலும் , மின்கட்டண அதிகரிப்பு விவகாரத்திலும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் மேற்குறிப்பிட்ட உறுப்பினர்களுக்குமிடையில் தொடர்ந்தும் கருத்து முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில் , அவர்கள் பதவியை இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08