தெரணியகல, மல்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் வகையில் சகோதரிகள் இருவரின் சடலங்கள் நேற்று வியாழக்கிழமை (2) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.
உல வல்பொல ரலால பகுதியைச் சேர்ந்த திமுத வசந்தி (51) மற்றும் முதிதா லக்மாலி (49) ஆகிய இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த வீட்டின் இன்னொரு அறையில் 90 வயதுடைய தாயாரும் காணப்பட்ட நிலையில், அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இரு பெண்களின் உடல்களும் துர்நாற்றம் வீசுவதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரு சகோதரிகளில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM