தெரணியகல வீடொன்றிலிருந்து இரு சகோதரிகளின் சடலங்கள் மீட்பு!

Published By: Nanthini

03 Feb, 2023 | 01:07 PM
image

தெரணியகல, மல்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் வகையில் சகோதரிகள் இருவரின் சடலங்கள் நேற்று வியாழக்கிழமை (2) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.

உல வல்பொல ரலால பகுதியைச் சேர்ந்த திமுத வசந்தி (51) மற்றும் முதிதா லக்மாலி (49) ஆகிய இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த வீட்டின் இன்னொரு  அறையில் 90 வயதுடைய தாயாரும்  காணப்பட்ட நிலையில், அவர் மீட்கப்பட்டு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இரு பெண்களின் உடல்களும்  துர்நாற்றம் வீசுவதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பே அவர்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு சகோதரிகளில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04