ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை இயக்குநர் தில்பாக் சிங் நேற்று ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்முவின் நார்வால் பகுதியில் சமீபத்திய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் ரியாசி மாவட்டத்தை சேர்ந்த ஆரிப் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். பாகிஸ்தானில் இருந்து வந்த உத்தரவுகளுக்கு ஏற்ப ஆரிப் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த மே மாதம் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்களின் பேருந்தில் குண்டுவெடித்ததில் 4 பேர் இறந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர். இதுபோன்ற பல்வேறு தாக்குதல்களில் தனது பங்கு இருப்பதாக ஆரிப் ஒப்புக்கொண்டுள்ளார். ஆரிப்பிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு தில்பாக் சிங் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM