ஏறாவூர் - சவுக்கடியில் கரையொதுங்கிய மீனவரின் சடலம்

Published By: Digital Desk 5

03 Feb, 2023 | 10:42 AM
image

ஏறாவூர் பொலிஸ் பிரிவு சவுக்கடி கடலில் சடலொமொன்று கரையொதுங்கியது.

இச்சம்பவம் வியாழக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளதாக இப்பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

கடந்த  திங்கட்கிழமை மாலை பாலமீன்மடு கடலில் மீன் பிடிக்கச் சென்ற சுவிஸ் கிராமம் திராய்மடுவை சேர்ந்த இருதயம் அன்டனி 41வயதுடையவர் படகொன்றில் சென்று மறுநாள் (31)  காலை கரையை நோக்கி வரும்போது பாரிய அலையொன்றினால் படகு கவிழ்ந்து காணாமல் போயிருந்தார்.

குறித்த விடயமாக கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக காணாமல்போன அன்டனி என்பவரை தேடிய உறவினர்களுக்கு ஏறாவூர் சவுக்கடி கடலில் சடலொமொன்று கரையொதுங்கியிருப்பதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது மனைவி 'சடலம் எனது கணவருடையது தான்' என அடையாளம் காட்டினார்.

மரண விசாரணைகளை முன்னெடுத்த மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை முடிவுற்றதும்  சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56