ஏறாவூர் - சவுக்கடியில் கரையொதுங்கிய மீனவரின் சடலம்

Published By: Digital Desk 5

03 Feb, 2023 | 10:42 AM
image

ஏறாவூர் பொலிஸ் பிரிவு சவுக்கடி கடலில் சடலொமொன்று கரையொதுங்கியது.

இச்சம்பவம் வியாழக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளதாக இப்பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

கடந்த  திங்கட்கிழமை மாலை பாலமீன்மடு கடலில் மீன் பிடிக்கச் சென்ற சுவிஸ் கிராமம் திராய்மடுவை சேர்ந்த இருதயம் அன்டனி 41வயதுடையவர் படகொன்றில் சென்று மறுநாள் (31)  காலை கரையை நோக்கி வரும்போது பாரிய அலையொன்றினால் படகு கவிழ்ந்து காணாமல் போயிருந்தார்.

குறித்த விடயமாக கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக காணாமல்போன அன்டனி என்பவரை தேடிய உறவினர்களுக்கு ஏறாவூர் சவுக்கடி கடலில் சடலொமொன்று கரையொதுங்கியிருப்பதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது மனைவி 'சடலம் எனது கணவருடையது தான்' என அடையாளம் காட்டினார்.

மரண விசாரணைகளை முன்னெடுத்த மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை முடிவுற்றதும்  சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரை தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடாசா விவகாரம் - சரத்வீரசேகரவின் கருத்து...

2023-05-30 07:33:20
news-image

அரசியலமைப்பு பேரவையின் செயல்திறன் குறித்து ஜனாதிபதிக்கு...

2023-05-29 22:27:51
news-image

கைதுசெய்யப்பட்டுள்ள பௌத்தமதகுருவை திரைமறைவு சக்திகள் இயக்குகின்றன...

2023-05-30 06:35:08
news-image

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வர புத்தசாசனத்தை...

2023-05-29 22:22:51
news-image

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய கடற்பரப்பில்...

2023-05-29 22:10:56
news-image

இன, மத வெறுப்பை கக்கி வரும்...

2023-05-29 22:33:01
news-image

பரீட்சைகளை நடத்துவது மாணவர்களின் வசதிக்கு அன்றி ...

2023-05-29 22:30:27
news-image

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பது...

2023-05-29 22:18:09
news-image

தமிழ் மக்களின் இருப்பை அச்சுறுத்தும் இனவாத...

2023-05-29 22:15:50
news-image

புதுக்குடியிருப்பில் குளத்தினை ஆக்கிரமிக்கும் தனி நபர்...

2023-05-29 22:01:09
news-image

முஸ்லிம்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஜனாதிபதி...

2023-05-29 21:57:12
news-image

பேராசிரியர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் வடக்கு, கிழக்கு...

2023-05-29 17:42:27