(எம்.மனோசித்ரா)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதித்ததாகக் குறிப்பிட்டு, இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வெள்ளிக்கிழமை (03) மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருப்பதாக இலங்கை மின்சாரசபை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருக்குமாறு தம்மால் வழங்கப்பட்ட அறிவிப்பை மீறி , இலங்கை மின்சாரசபை அதிகாரிகள் செயற்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தது.
குறித்த மனு வியாழக்கிழமை (02) பி.பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குனரத்ன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது , மின்சாரசபையின் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலகேவா இந்த உத்தரவாதத்தை நீதிமன்றத்திற்கு வழங்கியதோடு , திட்டமிடல்களுக்கு அப்பால் குறித்த காலப்பகுதியில் இதுவரையில் மின்சாரசபை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்பதையும் மன்றுக்கு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM