மனுவை மறுபரிசீலனைக்குட்படுத்தப்படும் வரை மின் துண்டிப்பு இல்லை - மின்சாரசபை உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

Published By: Digital Desk 5

02 Feb, 2023 | 09:21 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதித்ததாகக் குறிப்பிட்டு, இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை வெள்ளிக்கிழமை (03) மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருப்பதாக இலங்கை மின்சாரசபை உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடையும் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தாமலிருக்குமாறு தம்மால் வழங்கப்பட்ட அறிவிப்பை மீறி , இலங்கை மின்சாரசபை அதிகாரிகள் செயற்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்தது.

குறித்த மனு வியாழக்கிழமை (02) பி.பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் ஷிரான் குனரத்ன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது , மின்சாரசபையின் சார்பில் முன்னிலையாகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலகேவா இந்த உத்தரவாதத்தை நீதிமன்றத்திற்கு வழங்கியதோடு , திட்டமிடல்களுக்கு அப்பால் குறித்த காலப்பகுதியில் இதுவரையில் மின்சாரசபை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்தவில்லை என்பதையும் மன்றுக்கு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21