கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதியில் விபத்து : இரு இளைஞர்கள் பலி!

Published By: Digital Desk 5

02 Feb, 2023 | 04:57 PM
image

கம்பளை நாவலப்பிட்டி பிரதான வீதியில் ஹெட்காலை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 19 , 20 வயதுகளுடைய இரு இளைஞர்கள் பலியாகியுள்ளதாக ஹெட்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் போது உடுநுவர வெலம்பொட பாடசாலை ஒழுக்கையைச்  சேர்ந்த மொஹமட் சித்தீக் மொஹமட் சபீக் 19 வயது மற்றும் லியங்காவத்தையைச் சேர்ந்த மொஹமட் கபூர் மொஹமட் ஹர்ஷாட் 20 வயது இளைஞர்களே பலியாகியுள்ளனர்.

நேற்று (01)  இரவு இடம்பெற்ற மேற்படி சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மேற்குறிப்பிட்ட இரு இளைஞர்களின் ஒருவரது தந்தைக்கு சொந்தமான நாவலப்பிட்டியில் அமைந்துள்ள தேயிலைத்தொழிற்சாலைக்கு  சென்றுவிட்டு மீண்டும் தமது வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் எதிரேசென்ற வாகனத்தினை முந்திச் செல்ல முற்பட்ட சமயம் கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த காரில் மோதி விபத்து சம்பவித்துள்ளமை அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்ததாக பொலிஸார் தெரித்தனர்.

காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு மேற்படி சம்பவம் குறித்த விசாரணைகளை ஹெட்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

7,500 ரூபாவாக குறைவடையும் 50 கிலோ...

2023-03-23 16:49:28
news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46