மட்டக்களப்பு நீதிமன்றத்தில் கைதியொருவர் நீதிமன்ற சுவரால் பாய்ந்து தப்பி ஓடிய சம்பவம் இன்று வியாழக்கிழமை (பெ. 2) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சாவுடன் நேற்று நபரொருவரை கைதுசெய்த பொலிஸார் அவரை இன்று பகல் 12 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்று நீதவான் அறையில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அப்போது கைதியின் கைவிலங்கை பொலிஸார் கழற்றியபோது குறித்த நபர் அங்கிருந்து ஓடி, நீதிமன்ற மதில் மீது ஏறி வெளியே பாய்ந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து தப்பி ஓடிய கைதியை தேடி, கைதுசெய்வதற்காக பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM