இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர்

Published By: Digital Desk 5

02 Feb, 2023 | 03:42 PM
image

(நா.தனுஜா)

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேபாளத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி பிமலா ராய் பௌட்யால் நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின்பேரில் நாட்டிற்கு வருகைதரவுள்ள நேபாள வெளிவிவகார அமைச்சர் பிமலா ராய் பௌட்யால், சனிக்கிழமை (04) கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ள சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்வார்.

அதுமாத்திரமன்றி நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் திட்டமிட்டுள்ள அவர், வெள்ளிக்கிழமை (03) ஜனாதிபதி செயலகத்தினால் சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'லங்கார லங்கா' என்ற கலாசார நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ள பிமலா ராய் பௌட்யால், ஜனாதிபதியின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உபசார நிகழ்விலும் பங்கேற்பதோடு ஞாயிறன்று மீண்டும் நேபாளம் திரும்புவார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:22:13
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:21:10
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39
news-image

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேக...

2023-03-23 13:25:45
news-image

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படும்...

2023-03-23 12:41:35
news-image

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

2023-03-23 12:12:23