தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பணம் பயன்படுத்தப்படுகிறதா ? ஆணைக்குழுவிடம் விளக்கம் கோரும் தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம்

Published By: Vishnu

02 Feb, 2023 | 03:25 PM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்ற தேர்தல் செலவுகளுக்கு , வேட்பாளர்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணம் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடாகும். எனவே இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நிதியை திரட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக தேர்தல் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணத்தை செலவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டுப்பணம் செலுத்தப்படுவதற்கான காரணம் தேர்தலில் அநாவசியமான நபர்களின் பிரவேசம் காணப்படக் கூடாது என்பதற்காகவேயாகும்.

இது நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

கட்டுப்பணம் இதுவரையில் எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்தப்படவில்லை. தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அரசுடைமையாக்கப்பட்ட கட்டுப்பணம் திறைசேறிக்கு அனுப்பி வைக்கப்படும். எஞ்சிய பணம் அந்தந்த அரசியல் கட்சிகளுக்கும் , சுயாதீன குழுக்களுக்கும் திருப்பி செலுத்தப்படும்.

எனவே இம்முறை செலுத்தப்பட்டுள்ள கட்டுப்பணத்தை தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். ஆணைக்குழுவின் தரவிற்கமைய சுமார் 80 000 வேட்பாளர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அவர்களால் செலுத்தப்பட்ட கட்டுப்பணம் தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டால் அது தவறான முன்னுதாரணமாக அமையும். 

அது தேர்தலை சுதந்திரமாகவும் , நியாயமானதாகவும் நடத்துவதில் சட்ட சிக்கலை ஏற்படுத்தும். அரசியலமைப்பின் 21ஆவது உறுப்புரையின் 30(4) க்கு அமைய இந்த ஆணைக்குழு தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஒன்றாகும்.

அதன் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் குறிப்பிட்ட காலம் நிறைவடைந்ததன் பின்னர் பதவி விலக வேண்டும். இவ்வாறான நிலையில் முறையற்ற வகையில் அரசாங்கப் பணம் செலவிடப்படுவதால் எதிர்காலத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர்களும் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும். அத்தோடு ஊழல் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

எனவே வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணம் தேர்தல் செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03
news-image

இறக்குமதியாகும் பால் மாவின் விலையை குறைக்க ...

2023-03-23 13:28:39