தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர அந்தஸ்தை பெறுவதற்காக கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படமான 'பார்டர்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பார்டர்'. இதில் அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ஸ்டெஃபி பட்டேல் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகை ரெஜினா கஸண்ட்ரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். பி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி. விஜயராகவேந்திரா தயாரித்திருக்கிறார்.
இது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் எதிர்பாராத சில காரணங்களால் திட்டமிட்டபடி வெளியாகாத இந்த திரைப்படம், தற்போது இம்மாதம் 24ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேசபக்தியை மையப்படுத்திய எக்சன் என்டர்டெய்னர் என்ற படைப்பு என்பதாலும், தேசபக்தியை மையமாக கொண்ட 'பதான்' எனும் ஹிந்தி திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருப்பதாலும், இந்த திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெறும் எனத் திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM