நட்சத்திர வாரிசாக இருந்தாலும், திரையுலகில் தனி திறமையால் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், 'புதிதாக பிறந்திருக்கும் இந்த ஆண்டில் இசை துறையில் அதிகமாக சாதிக்க விரும்புகிறேன்' என தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து பேசுகையில், '' கொரோனா தொற்று காலகட்டத்தில் எம்மை பற்றிய சுய மதிப்பீடு செய்து கொண்டேன். இசைத் துறையில் புதிதாக பாடல்களை எழுதவும் நேரம் கிடைத்தது. லண்டனில் நேரலையாக நடத்திய இசை நிகழ்ச்சிகளை மீண்டும் பார்த்து ரசிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. நேரலை நிகழ்ச்சியில் நான் பாடுவதையும், நான் பாடும்போது மக்களின் ரசிப்பதையும் கண்டு ரசித்தேன். இதனால் தொடர்ந்து நேரலை நிகழ்ச்சிகளை நடத்த விரும்புகிறேன்.
இசையும், பாடலும் கடவுள் எமக்கு அளித்த மிகப்பெரிய கொடை. இதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த ஆண்டு இதற்கென கூடுதலாக நேரத்தை ஒதுக்கி பணியாற்ற திட்டமிட்டிருக்கிறேன்.'' என்றார் நடிகை ஸ்ருதிஹாசன்.
இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 'வீர சிம்ஹா ரெட்டி', 'வால்டேர் வீரய்யா' ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் அண்மையில் வெளியாகி, இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் மேல் வசூலித்திருப்பதால், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து 'ராசியான நடிகை' என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கிறார். தற்போது பேன் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடிப்பில், 'கே ஜி எஃப்' படப் புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் 'சலார்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM