(ஏ.என்.ஐ)
ஜி4 அல்லது இந்தியா, பிரேசில், ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகளின் குழு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் சீர்திருத்தத்தின் அவசியம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் கட்டமைப்பை உருவாக்கவும் வலியுறுத்தியுள்ளது.
77வது ஐநா பொதுச் சபை அமர்வின் தொடக்க கூட்டத்தில், ஐநாவுக்கான ஜெர்மனியின் நிரந்தரப் பிரதிநிதி, ஜி4 சார்பாக, பாதுகாப்பு சபையில் சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்தார்.
கடந்த செப்டம்பரில் நடைபெற்ற பொது விவாதத்தில், உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் உட்பட, இந்த பேரவையின் பெரும்பாலான நிரந்தர உறுப்பினர்கள் உட்பட, பெரும்பாலான தலைவர்கள் பொது விவாதத்தில் மீண்டும் ஒருமுறை தெளிவாக ஒப்புக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
பாதுகாப்பு பேரவை தனது சாசனம்-கட்டாயமான கடமைகளை நிறைவேற்ற இயலாமை குறித்து இதன் போது விரக்தியை வெளிப்படுத்தினார். பேரவையின் செயல்பாடுகளை சமாளிக்க உதவும் செயல்பாட்டில் முழுமையான முன்னேற்றம் இல்லாததைக் கண்டு கவலையடைவதாகவும் குறிப்பிட்டார்.
ஐ.நா.வுக்கான ஜெர்மனியின் நிரந்தரப் பிரதிநிதி மேலும் குறிப்பிடுகையில், கடந்த 15 ஆண்டுகளாக அரசுக்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விவாதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆர்வமுள்ள பங்குதாரர்களின் நிலைப்பாட்டைக் கூறுவதற்கான வரைவு இன்னும் வெளியிடப்பட வில்லை என்றார்.
சமமான புவியியல் விநியோகம் மற்றும் பிராந்திய பிரதிநிதித்துவம் ஆகிய கருத்துக்களில் சர்வதேச அமைப்பின் முக்கியத்துவமானது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம், ஏனெனில் இந்த பிரதிநிதித்துவம், சட்டபூர்வமான தன்மை மற்றும் செயல்திறனுக்கு அவசியம் என்று ஜெர்மனியின் நிரந்தரப் பிரதிநிதி கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM