(என்.வீ.ஏ.)
தென் ஆபிரிக்காவுக்கு எதிராக கிம்பர்ளி, டயமண்ட் ஓவல் விளையாட்டரங்கில் புதன்கிழமை (01) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜொஸ் பட்லர் குவித்த அபார சதமும் ஜொவ்ரா ஆச்சரின் சிறப்பான பந்துவீச்சும் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றியை ஈட்டிக்கொடுத்தது.
எனினும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் தென் ஆபிரிக்கா தனதாக்கிக்கொண்டது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபற்றும் தென் ஆபிரிக்காவின் வாய்ப்பு சற்று தாமதப்படுத்தப்பட்டுள்ளது.
ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 79 புள்ளிகளுடன் தற்போது 9ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்கா, தனது சொந்த மண்ணில் நெதர்லாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரில் முழுமையாக வெற்றிபெற்றால் உலகக் கிண்ணத்தில் நேரடியாக பங்குபற்ற வாய்ப்பு கிடைக்கும்.
புதன்கிழமை நடைபெற்ற கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 346 ஓட்டங்களைக் குவித்தது.
போட்டியின் 6ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 14 ஓட்டங்களாக இருந்தபோது இங்கிலாந்து அதன் 3ஆவது விக்கெட்டை இழந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது.
ஆனால், டேவிட் மாலன், அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 232 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தை பலப்படுத்தினர். சகல நாடுகளுக்கும் எதிராக இங்கிலாந்து சார்பாக 4ஆவது விக்கெட்டில் பகிரப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டம் இதுவாகும்.
டேவிட் மாலன் 114 பந்துகளில் 7 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 118 ஓட்டங்களைப் பெற்றார். இது அவரது 3ஆவது சர்வதேச ஒருநாள் சதமாகும்.
11ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்த ஜொஸ் பட்லர் 127 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 6 பவுண்டறிகளுடன் 131 ஓட்டங்களைக் குவித்தார்.
அவர்களை விட மொயீன் அலி 41 ஓட்டங்களைப் பெற்றார்.;
தென் ஆபிரிக்க பந்துவீச்சில் லுங்கி நிகிடி 62 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
347 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 43.1 ஓவர்களில் 287 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த இங்கிலாந்து 31ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
டெம்பா பவுமா (38), ரீஸா ஹெண்ட்றிக்ஸ் (52) ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தொடர்ந்து 3ஆவது விக்கெட்டில் ரீஸா ஹெண்ட்றிக்ஸுடன் ஏய்டன் மார்க்ராம் சரியாக 50 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அவர் 39 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார். (158 - 43 விக்.)
தொடர்ந்து டேவிட் மில்லர் (13), மார்க்கோ ஜென்சன் (12) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டமிழந்தனர். (193 - 6 விக்.)
எவ்வாறாயினும் ஹெய்ன்றிச் க்ளாசென், வேய்ன் பார்னல் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஒரளவு பலம் சேர்த்தனர். க்ளாசென் 80 ஒட்டங்களையும் பார்னல் 34 ஓட்டங்களையும் பெற்றனர்.
உபாதை காரணமாக 28 மாதங்களின் பின்னர் மீண்டும் விளையாட ஆரம்பித்த ஜொவ்ரா ஆச்சர் மீள்வருகையில் 2ஆவது போட்டியில் 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றி தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார்.
அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய ஆதில் ராஷித் 68 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய 2 விருதுகளையும் ஜொஸ் பட்லர் வென்றெடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM