வெளிநாட்டில் வசிக்கும் ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றமொன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை விமர்சித்தமைக்காக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
64 வயதான அலெக்ஸாண்டர் நெவ்ஸோரோவ் எனும் ஊடகவியலளாருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரேனின் தென் பகுதியிலுள்ள மரியுபோலிலுள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்ய படையினர் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல் நடத்தியதாக நெவ்ஸோரோவ் குற்றம்சுமத்தியிருந்தார்.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் அவர் பொய்யான தகவல்களைப் பரப்புவதாக ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சுமத்தினர்.
நெவ்ஸோரோவுக்கு எதிராக ரஷ்ய நீதிமன்றமொன்றில் நடைபெற்ற வழக்கில் அவர் பங்குபற்றவில்லை. ஏற்கெனவே அவர் ரஷ்யாவிலிருந்து வெளியேறியிருந்தார்.
இந்நிலையில், நெவ்ஸோரோவை குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம், அவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM