வெளிநாட்டிலுள்ள ரஷ்ய ஊடகவியலாளருக்கு 8 வருட சிறை

Published By: Sethu

01 Feb, 2023 | 05:54 PM
image

வெளிநாட்டில் வசிக்கும் ரஷ்ய ஊடகவியலாளர் ஒருவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றமொன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. உக்ரேன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையை விமர்சித்தமைக்காக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

64 வயதான அலெக்ஸாண்டர் நெவ்ஸோரோவ் எனும் ஊடகவியலளாருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரேனின் தென் பகுதியிலுள்ள மரியுபோலிலுள்ள மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்ய படையினர் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல் நடத்தியதாக நெவ்ஸோரோவ் குற்றம்சுமத்தியிருந்தார். 

உக்ரேன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பில் அவர் பொய்யான தகவல்களைப் பரப்புவதாக ரஷ்ய அதிகாரிகள் குற்றம் சுமத்தினர். 

நெவ்ஸோரோவுக்கு எதிராக ரஷ்ய நீதிமன்றமொன்றில் நடைபெற்ற வழக்கில் அவர் பங்குபற்றவில்லை. ஏற்கெனவே அவர் ரஷ்யாவிலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், நெவ்ஸோரோவை குற்றவாளியாகக் கண்ட நீதிமன்றம், அவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24