வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன் சென்றவர் விபத்தில் சிக்கி இருவரும் பலி!

Published By: Vishnu

01 Feb, 2023 | 04:14 PM
image

தம்புள்ளை – குருணாகல் வீதியில் கொகரெல்ல வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து இ.போ.ச பஸ்ஸுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கொகரெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மல்சிறிபுர நீரமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ரத்நாயக்க என்பவரும் 62 வயதான பெண்ணுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவியைப் பார்ப்பதற்காக தனது தாயுடன் 36 வயதான நபர் சென்று கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து கொழும்பிலிருந்து ஹொரவபத்தானை நோக்கி பயணித்த  பஸ்ஸுடன் மோதியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில்  தெரிய வந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இ.போ.ச சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

நுகேகொடையில் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:34:08
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01