சிறந்த குணச்சித்திர நடிகையான ஊர்வசி, 'அப்பத்தா' எனும் படத்தில் நடித்ததன் மூலம், அவருடைய திரையுலக பயணத்தில் 700 ஆவது திரைப்படத்தை நிறைவு செய்ததற்காக திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழில் 'முந்தானை முடிச்சு' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமானவர் நடிகை ஊர்வசி. 'முந்தானை முடிச்சு' படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், பிரபு, சத்யராஜ், அர்ஜுன், சரத்குமார் ஆகிய முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தற்போது 'காசேதான் கடவுளடா', 'அந்தகன்', 'ஜே. பேபி', 'யானை முகத்தான்' ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 'அப்பத்தா' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தில் 700 ஆவது திரைப்படத்தை நிறைவு செய்திருக்கிறார். அவரது இந்த பயணத்தை தென்னிந்திய திரையுலகினைச் சார்ந்த பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கன்னத்தில் குழி விழும் அளவிலான சிரிப்பு, வசனத்தை உச்சரிக்கும் போது பிரத்யேக பாணி, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அனாயசமாக நடிக்கும் திறன்... என பன்முகத் திறமை பெற்றக் கலைஞரான இவரை ரசிகர்கள், ' பொம்பள கமல்' என அன்புடன் ஒப்பிடுகிறார்கள். மூத்த இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'அப்பத்தா' எனும் திரைப்படம், அண்மையில் மும்பையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதன் போது அவ்விழாவில் பங்குபற்றிய சிறப்பு அதிதிகள் உள்ளிட்ட பலரும் அப்பத்தாவாக நடித்திருந்த ஊர்வசியின் நடிப்பை வியந்து பாராட்டினர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்திருக்கும் இவர் பின்னணி குரல் கொடுக்கும் கலைஞரும் கூட. நடிகை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி தொடரிலும், வலைதள தொடரிலும் நடித்திருக்கிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றிருக்கும் இவர், விரைவில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM