நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் புதிய திரைப்படமான 'ப்ளூ ஸ்டார்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக பிரத்யேக கேக் ஒன்றினை வடிவமைத்து, அதனை வெட்டி பட குழுவினர் கொண்டாடி இருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இதில் அசோக் செல்வன், சாந்தனு பாக்கியராஜ், ப்ருத்வி, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, தமிழ் பிரபா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தமிழ் ஏ. அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். உள்ளூர் துடுப்பாட்டத்தை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக லெமன் லீஃப் கிரியேஷன்ஸ் பட நிறுவனத்தினூடாக தயாரிப்பாளர்கள் கணேசமூர்த்தி மற்றும் சௌந்தர்யா கணேசமூர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் பின்னணி பணிகள் தொடங்கும் என்றும், இதனிடையே ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'ப்ளூ ஸ்டார்’ பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாராகும் திரைப்படம் என்பதாலும், துடுப்பாட்டத்தை முன்னிலைப்படுத்திய படைப்பு என்பதாலும், தலைப்பு 'ப்ளூ ஸ்டார்' என்றிருப்பதாலும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM