(என்.வீ.ஏ.)
இந்தியாவில் இந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு நேரடித் தகுதியைப் பெறும் குறிக்கோளுடன் இன்று புதன்கிழமை (01) நடைபெறவுள்ள மூன்றாவதும் கடைசியுமான ஐசிசி உலக கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் போட்டியில் இங்கிலாந்தை தென் ஆபிரிக்கா எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடும் தனது வாய்ப்பை பெரும்பாலும் தென் ஆபிரிக்கா உறுதிசெய்துகொள்ளும். அப் போட்டியில் வெற்றி பெறும் அதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தென் ஆபிரிக்கா ஓவர்களை நிறைவு செய்யவேண்டும். தவிறினால் தண்டப் புள்ளியைப் பெற்று உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதியைப் பெறுவது தாமதப்படும்.
ஒருவேளை இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்தால் அதன் சொந்த மண்ணில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நெதர்லாந்துடனான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் முழுமையாக வெற்றிபெறுவது அவிசயமாகும்.
ஏனெனில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை வெற்றிபெற்றால் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் தென் ஆபிரிக்கா விளையாட நேரிடும்.
எனவே இன்றைய போட்டியிலும் தொடரும் நெதர்லாந்துடனான தொடரில் முழுமையாகவும் வெற்றிபெறுவதற்கு தென் ஆபிரிக்கா முயற்சிக்கவுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா இருதரப்பு தொடரை ஏற்கனவே தனதாக்கிக்கொண்டுள்ளது.
இந் நிலையில், நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்து ஆறுதல் வெற்றியை ஈட்ட கடுமையாக முயற்சிக்கும்.
எனினும் இங்கிலாந்தின் அண்மைய ஒரு நாள் போட்டி முடிவுகள் திருப்திகரமாக இல்லாததால் இன்றைய போட்டியில் கடும் சவாலை எதிர்கொள்ளும்.
கடந்த வருடம் 12 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து 5 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. 6 போட்டிகளில் தோல்வி அடைந்ததுடன் ஒரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.
மேலும் நடப்பு தொடர் உட்பட கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் இங்கிலாந்து தொடர்ச்சியாக தோல்வி அடைந்துள்ளது. எனவே உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்கு முன்னர் இங்கிலாந்து சகல துறைகளிலும் முன்னேறத் தவறினால் உலக சம்பியன் பட்டத்தை தக்கவைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளும்.
இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வெற்றிகொள்ள முயற்சிக்கவுள்ளதால் முதல் இரண்டு போட்டிகளைப் போன்று கடைசிப் போட்டியும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
அணிகள்
இங்கிலாந்து: ஜேசன் ரோய், ஃபில் சோல்ட், டேவிட் மாலன், ஹெரி ப்றூக், ஜொஸ் பட்லர் (தலைவர்), மொயீன் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், டேவிட் விலி, ஆதில் ராஷித், ஜொவ்ரா ஆச்சர்.
தென் ஆபிரிக்கா: ஜான்மன் மாலன் அல்லது ரீஸா ஹெண்ட்றிக்ஸ், டெம்பா பவுமா (தலைவர்). ரசி வென் டேர் டுசென், ஏய்டன் மார்க்ராம், ஹெய்ன்றிச் க்ளாசென், வெய்ன் பார்னல், சிசண்டா மகாலா, கேஷவ் மஹராஜ், தப்ரெய்ஸ் ஷம்சி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM