(எம்.மனோசித்ரா)
தொழிநுட்பவியல் கல்லூரி மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஆராய்ச்சி சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவின் வொசிங்டன் நகரில் அமைந்துள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகமும் இணைந்து, பெனின் குடியரசு, பிலிப்பைன், டன்சானியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் ஒத்துழைப்படன் நிலைபெறுதகு வகையான போசாக்கு மிக்க உணவு முறைகளுக்காக பழவகைகள் மற்றும் மரக்கறிகளின் பயன்பாடுகள் தொடர்பான ஆராய்ச்சியை நடாத்துவதற்காக சர்வதேச விவசாய ஆராய்ச்சி நிலைய அமைப்புடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் அறுவடைக்குப் பின்னரான முகாமைத்துவம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தொடர்பாக சமகால நிலைமைகள் தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட ஆராய்ச்சி சேவைகள் சிலவற்றை நடாத்துவதற்காக சிட்னி பல்கலைக்கழகத்தால் தொழிநுட்பவியல் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்காக 11 250 அவுஸ்திரேலிய டொலர் நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக தொழிநுட்பவியல் கல்லூரி மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உப ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM