(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கையின் முன்னாள் தேசிய சம்பியனான ஹிமாஷ ஹேஷானுக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டு கால போட்டித் தடை 6 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கு இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் நிலையம் ( Sri lanka Anti Drugs Agent - SLADA -'ஸ்லாடா') நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதியன்று ஹிமாஷ ஹேஷானின் சிறுநீர் மாதிரியை பெற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பாவிக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ' ஸ்லாடா' அவருக்கு தற்காலிக போட்டித் தடை விதித்தது. அதன் பின்னர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த 'ஸ்லாடா', அவர் குற்றவாளி எனக்கூறி அவருக்கு 4 ஆண்டு கால போட்டித் தடையை கடந்த 2022 ஜூன் மாதம் விதித்தது. இக்காலப்பகுதியானது, 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 வரையாகும்.
இந்நிலையில், தடையை எதிர்த்து ஸ்லாடாவின் மேன்முறையீட்டு சபையில் தடையை எதிர்த்து ஹிமாஷ ஹேஷான் மேன்முறையீடு செய்திருந்தார். இந்த மேன்முறையீட்டு விசாரணையின் தீர்ப்பை ஸ்லாடா கடந்த 24 ஆம் திகதியன்று வெளியிட்டிருந்தது. இதன்படி, ஹிமாஷ ஹேஷானுக்கு 2027 ஒக்டோபர் 25 ஆம் திகதி வரையான 6 ஆண்டு காலத்திற்கு போட்டித் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
6 ஆண்டு கால போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ள ஹிமாஷ ஹேஷான், இக்காலப்பகுதியில் எந்தவொரு போட்டிகள் மற்றும் பயிற்சிகளிலும் ஈடுபட முடியாது என 'ஸ்லாடா'வின் அறிவிப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM