மொத்த செலவுடன் ஒப்பிடுகையில் சுதந்திர தினத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை சொற்பமே - அமைச்சரவை பேச்சாளர்

Published By: Digital Desk 5

31 Jan, 2023 | 02:07 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் வருடாந்த செலவுகளுடன் ஒப்பிடும் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை சொற்பமாகும்.

சம்பிரதாயபூர்வமான இந்த செலவினை தவிர்க்குமாறு எவராலும் கூற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (31) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

அரசாங்கத்தின் வருடாந்த செலவீனங்களுடன் ஒப்பிடுகையில் வருடத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம் கொண்டாடப்படும் சுதந்திர தினத்திற்காக செலவிடப்படும் தொகை சொற்பமாகும். எனவே அரசாங்கத்தினால் சுதந்திர தினத்தை கொண்டாடாமல் இருக்க முடியாது.

எந்தவொரு நாடும் தமது தேசிய தினத்தை கொண்டாடுவது சம்பிரதாயமாகும். குறித்த தினத்தில் இலங்கை தொடர்பில் ஏனைய நாடுகளிலும் பேச்சப்படும்.

கடந்த வாரம் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதன் குடியரசு தின நிகழ்வை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தமை விசேட அம்சமாகும்.

எனவே இந்த சம்பிரதாயபூர்வ செலவுகளை செலவினை ஏற்க வேண்டாம் என்று எவராலும் கூற முடியாது.

இம்முறை இலங்கை சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எனவே செலவுகளைக் காரணமாகக் காண்பித்து இதனை தவிர்க்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பினைக் கோரும்...

2023-03-23 16:35:52
news-image

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைக்கு...

2023-03-23 16:41:51
news-image

பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்களின் பணயக்...

2023-03-23 16:41:51
news-image

வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக...

2023-03-23 16:34:01
news-image

மினுவாங்கொடையில் ரிவோல்வர், 4 கூரிய வாள்களுடன்...

2023-03-23 16:35:15
news-image

நெருக்கடி நிலையில் அரசாங்கத்திடம் இல்லாத வெளிப்படைத்தன்மையும்...

2023-03-23 16:31:39
news-image

தென் பகுதி மீன்பிடித் துறைமுகங்கள் தொடர்பில்...

2023-03-23 16:13:49
news-image

கச்சத்தீவில் புத்தர் சிலை எவ்வாறு தோற்றம்...

2023-03-23 15:52:51
news-image

இந்தியாவிலிருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் மூலம் செயற்படும்...

2023-03-23 15:44:14
news-image

துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பளை பிரதேசத்திற்குரிய...

2023-03-23 15:04:57
news-image

ஆற்றில் பொன்னாங்காணி பறித்துக் கொண்டிருந்தவர் மீது...

2023-03-23 16:16:46
news-image

ரிதியகம உல்லாச பூங்காவில் 4 குட்டிகள்...

2023-03-23 14:00:03