(என்.வீ.ஏ.)
புளூம்ஃபொன்டெய்ன் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (29) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றிகொண்டது.
இந்தியாவில் இந்த வருட பிற்பகுதியில் நடைபெறவுள்ள 50 ஓவர் ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட நேரடி தகுதிபெறுவதற்கு கடுமையாக முயற்சித்துவரும் தென் ஆபிரிக்காவுக்கு இந்த வெற்றி பெரும் திருப்தியைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் சுப்பர் லீக் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள தென் ஆபிரிக்கா தொடரை இப்போதைக்கு 2 - 0 என தனதாக்கிக்கொண்டுள்ளது.
உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இங்கிலாந்து ஏற்கனவே தகுதிபெற்றுவிட்ட நிலையில், ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் தரவரிசையில் தற்போது 9ஆம் இடத்தில் இருக்கும் தென் ஆபிரிக்கா, அடுத்து நடைபெறவுள்ள 3 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றிபெற்றால் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேரடியாக விளையாட தகுதிபெறும்.
இந்தத் தொடருக்கு முன்னர் 11ஆவது இடத்திலிருந்த தென் ஆபிரிக்கா, இந்த 2 வெற்றிகளுடன் 18 போட்டிகளில் 79 புள்ளிகளைப் பெற்று 9ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் தனது போட்டிகளை ஏற்கனவே நிறைவுசெய்துள்ளதுடன் 88 புள்ளிகளைப் பெற்று 8ஆம் இடத்தில் இருக்கிறது.
இங்கிலாந்துடனான 3ஆவது போட்டிக்குப் பின்னர் நெதர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆபிரிக்கா விளையாடவுள்ளது. இந்த 3 போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட நேரடி தகுதிபெறும்.
அதேவேளை, 77 புள்ளிகளுடன் 10ஆம் இடத்திலுள்ள இலங்கை, நியூஸிலாந்துடனான 3 போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக வெற்றிபெற்றால் மாத்திரமே தென் ஆபிரிக்கா நேரடி தகுதியைப் பெறுவது சந்தேகத்திற்கிடமாகும். எவ்வாறாயினும், நியூஸிலாந்தில் இலங்கை சாதிக்கும் என எதிர்பார்க்க முடியாது.
உலகக் கிண்ணப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறவேண்டும் என்ற குறிக்கோளுடன் தற்போது விளையாடி வரும் தென் ஆபிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது போட்டியில் டெம்பா பவுமாவின் அபார சதம், டேவிட் மில்லரின் அதிரடி அரைச் சதம் என்பவற்றின் உதவியுடன் 5 பந்துகள் மீதமிருக்க வெற்றியை உறுதி செய்துகொண்டது.
இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 343 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 347 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆபிரிக்கா விரட்டிக் கடந்த அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.
தென் ஆபிரிக்கா சார்பாக துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் டெம்பா பவுமா 109 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும் ஏய்டன் மார்க்ராம் 49 ஓட்டங்களையும் பெற்றனர்.
இங்கிலாந்து பந்துவீச்சில் ஒல்லி ஸ்டோன் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஆதில் ராஷித் 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 342 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களையும் ஹெரி ப்றூக் 80 ஓட்டங்களையும் மொயீன் அலி 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
தென் ஆபிரிக்க பந்துவீச்சில் அன்றிச் நோக்கியா 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM