அதிவேக ரயிலில் குழந்தை பிரசவித்த பயணி: பிரான்ஸில் சம்பவம்

Published By: Sethu

30 Jan, 2023 | 05:18 PM
image

பிரான்ஸில் அதிவேக ரயிலொன்றில் பயணம் செய்துகொண்டிருந்த பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசிவித்தார். 

பாரிஸுக்கும் ஸ்ட்ஸ்போக் நகருக்கும் இடையில் சென்றுகொண்டிருந்த ரயிலில் கடந்த வார இறுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

தனக்கு பிரசவ வலி ஏற்பட்டமை குறித்து ரயில் அதிகாரிகளுக்கு அப்பெண் தெரிவித்தார். அதையடுத்து, மருத்துவக் குழுவினர் ரயிலில் ஏறுவதற்காக  லொரைன் ரஜிவி ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் அப்பெண் ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார் என பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

பின்னர் தாயும் குழந்தையும் அருகிலுள்ள வைத்தியசலையொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  அவர்கள் இருவரும் நலமாக உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right